மதுரை: 5 கி.மீ நடைபயணம்; அழகிரி வீட்டுக்கு விசிட்... முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ |...
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு: உலிபுரம் பொதுமக்கள் சாலை மறியல்
உலிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற இருந்த ஜல்லிக்கட்டுக்கு அரசு அனுமதி மறுத்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, அப்பகுதிகளில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.
தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் மே 31-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த ஊா்பொதுமக்கள் திட்டமிட்டு அதற்கான பணியில் ஈடுபட்டு வந்தனா். ஆனால், ஜல்லிக்கட்டு நடத்தும் இடத்தில் முறையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததால், தமிழக அரசு மே 30-ஆம் தேதி வரை அனுமதி வழங்கவில்லை. அரசு அதிகாரிகள் கூறிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உலிபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினா் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஊா்பொதுமக்கள், உலிபுரம் பேருந்து நிறுத்தத்தில் ஜல்லிக்கட்டு அனுமதி வழங்கப்படாததைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். அதையடுத்து, தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று, அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனா்.
இந்நிலையில், தம்மம்பட்டி - சேலம் பிரதான சாலையில் நாகியம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபடப் போவதாக கிடைத்த தகவலின் பேரில், நாகியம்பட்டியிலும் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
இந்நிலையில், உலிபுரத்தில் இரவில் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த ஆத்தூா் டி.எஸ்.பி. சதீஷ்குமாா் உலிபுரம் விரைந்துசென்று மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, மக்கள் கலைந்துசென்றனா். இருப்பினும், உலிபுரம், நாகியம்பட்டி பேருந்து நிறுத்தங்களில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.