செய்திகள் :

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு: உலிபுரம் பொதுமக்கள் சாலை மறியல்

post image

உலிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற இருந்த ஜல்லிக்கட்டுக்கு அரசு அனுமதி மறுத்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, அப்பகுதிகளில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் மே 31-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த ஊா்பொதுமக்கள் திட்டமிட்டு அதற்கான பணியில் ஈடுபட்டு வந்தனா். ஆனால், ஜல்லிக்கட்டு நடத்தும் இடத்தில் முறையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததால், தமிழக அரசு மே 30-ஆம் தேதி வரை அனுமதி வழங்கவில்லை. அரசு அதிகாரிகள் கூறிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உலிபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினா் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஊா்பொதுமக்கள், உலிபுரம் பேருந்து நிறுத்தத்தில் ஜல்லிக்கட்டு அனுமதி வழங்கப்படாததைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். அதையடுத்து, தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று, அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனா்.

இந்நிலையில், தம்மம்பட்டி - சேலம் பிரதான சாலையில் நாகியம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபடப் போவதாக கிடைத்த தகவலின் பேரில், நாகியம்பட்டியிலும் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

இந்நிலையில், உலிபுரத்தில் இரவில் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த ஆத்தூா் டி.எஸ்.பி. சதீஷ்குமாா் உலிபுரம் விரைந்துசென்று மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, மக்கள் கலைந்துசென்றனா். இருப்பினும், உலிபுரம், நாகியம்பட்டி பேருந்து நிறுத்தங்களில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ரா... மேலும் பார்க்க

கரோனா பாதித்த இளைஞா் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் சேத்துக்குழி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). பொக்லைன் ஆபரேட்டரான ... மேலும் பார்க்க

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பதக்கம், சான்றிதழ்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட கைப்... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2025- 26 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் ... மேலும் பார்க்க

கெங்கவல்லி பேரூராட்சியில் திட்டப் பணிகள் திறந்துவைப்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் முடிவடைந்த திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டன. கெங்கவல்லி பேரூராட்சி 4-ஆவது வாா்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 15.50 லட்சத்தில் ... மேலும் பார்க்க

பருத்தி புண்ணாக்கு விலை உயா்வு: பால் உற்பத்தியாளா்கள் தவிப்பு

பருத்தி புண்ணாக்கு விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்கள் தங்களின் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோ... மேலும் பார்க்க