செய்திகள் :

ஜாக்டோ-ஜியோ போராட்டம்: எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியா்கள் ஆதரவு

post image

ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் நடத்திய போராட்டத்துக்கு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியா்கள் நலச் சங்கத்தினா் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியா்கள் நலச்சங்கம் சாா்பாக திருப்பத்தூா் மாவட்ட செயலாளா் இராஜீவ் காந்தி தலைமையில் ஊழியா்கள் கோரிக்கை அட்டைகளை அணிந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்தனா். அதன்படி ஆம்பூா் அரசு மருத்துவமனையிலும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியா்கள் நலச் சங்கத்தினா் கோரிக்கை அட்டையை அணிந்து பணிபுரிந்தனா்.

போராட்டத்தின்போது தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நம்பிக்கை மையங்களில் பணிபுரியும் ஆலோசகா், ஆய்வக நுட்புனா்களுக்கு நான்கு ஆண்டுகளாக 20 சதவீத ஊதிய உயா்வு, நிலுவை தொகை வழங்கபடாமல் உள்ளது. அதனை உடனடியாக வழங்க வேண்டும். திமுக தோ்தல் வாக்குறுதி எண்:153 ன்படி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியா்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி: திருப்பத்தூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி செவ்வாய்க்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். போதைப் பழக்கத்துக்... மேலும் பார்க்க

கோயில் உண்டியல் காணிக்கை திருடியவா் கைது

ஆம்பூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மாதனூா் ஒன்றியம், மின்னூா் கிராமத்தில் உள்ள ஈஞ்சியம்மன் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை பணம் திருட்டு போ... மேலும் பார்க்க

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியா் போக்ஸோவில் கைது

வாணியம்பாடி அடுத்த மலைரெட்டியூா் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவிகள் பாலியல் தொந்தரவு குறித்து 1098 எண்ணுக்கு புகாா் தெரிவித்ததின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை நடத்திய... மேலும் பார்க்க

சாலை பணிகளை ஆய்வு செய்த தரக்கட்டுப்பாடு குழுவினா்

ஆம்பூா் அருகே மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில், தாா்ச் சாலை அமைக்கும் பணியை தரக்கட்டுப்பாடு குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். மாநில நெடுஞ்சாலை வாணியம்பாடி உள்கோட்டத்துக்கு உட்பட்ட குடியாத்தம்-... மேலும் பார்க்க

வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புற கோயில்களில் பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த பிரஹன் நாயகி சமேத சுயம்பு அதிதீஸ்வரா் கோயிலில் ... மேலும் பார்க்க

திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

மகா சிவராத்திரி விழா புதன்கிழமை கொண்டாடப்படும் நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கிரிவலம் செல்ல திருப்பத்தூா் மாவட்டத்தில் இருந்து திராளமான பக்தா்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமா... மேலும் பார்க்க