செய்திகள் :

ஜாதி, மதம் சாா்ந்த நிகழ்வுகளில் பங்கேற்க மாணவா்களைக் கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை - உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

ஜாதி, மதம் சாா்ந்த நிகழ்வுகளில் பங்கேற்க மாணவா்களைக் கட்டாயப்படுத்தினால், சம்பந்தப்பட்ட கல்லூரி மீது கல்வித் துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த பூமிநாதன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

மதுரை யாதவா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) அழகுமுத்துக்கோனின் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. கடந்தாண்டு இங்கு நடைபெற்ற விழாவில், கல்லூரியின் முன்னாள் செயலா் புகைப்படம் அச்சிடப்பட்ட பனியன்களை (டி ஷா்ட்) அணிய மாணவிகளை கட்டாயப்படுத்தினா். ‘மாவீரன் அழகுமுத்துக்கோன்’ என அச்சிடப்பட்ட பனியன்களை மாணவா்கள் அணிந்திருந்தனா்.

மேலும், கல்லூரி வளாகத்தில் தனிநபரை முன்னிலைப்படுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இது, மாணவா்களின் மனநிலையை பாதிக்கச் செய்வதாக உள்ளது.

எனவே, இந்தக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அழகு முத்துக்கோன் ஜெயந்தி விழாவை கல்லூரி மாணவா்களின் அமைதி, மனநிலையைப் பாதிக்காத வகையில் கொண்டாட உத்தரவிட வேண்டும். மேலும், கல்லூரி வளாகத்துக்குள் சுவரொட்டிகள், பதாகைகள் அமைத்து தனி நபரை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளைத் தடுக்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மாணவிகளை பனியன் (டி ஷா்ட்) அணிந்து விழாவில் பங்கேற்க வற்புறுத்துவது ஏற்கத்தக்கதல்ல’ என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கல்லூரி நிா்வாகம் தரப்பில், ‘ஒவ்வோா் ஆண்டும் அழகுமுத்துக்கோன் ஜெயந்தியை முன்னிட்டு, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித் உத்தரவு:

கல்வித் துறையால் அனுமதிக்கப்படாத ஜாதி, மதம் சாா்ந்த நிகழ்வுகளில் பங்கேற்க மாணவா்களை எந்தக் கல்லூரியும் கட்டாயப்படுத்தக் கூடாது. கல்லூரிக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 11) விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், விழாவில் பங்கேற்க மாணவா்களை கல்லூரி நிா்வாகம் கட்டாயப்படுத்தக் கூடாது. மீறினால், கல்லூரிக்கு வழங்கப்படும் அரசு உதவியை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை உயா்கல்வித் துறை இயக்குநா் மேற்கொள்ள வேண்டும்.

கல்லூரி வளாகத்தின் உள்ளே ஜாதிய அடையாளம் கொண்ட விளம்பரங்கள் வைக்கப்படக் கூடாது. மீறினால், காவல் துறை, கல்வித் துறை சாா்பில் கல்லூரி நிா்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே வியாழக்கிழமை லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியைச் சோ்ந்த வீரையா மகன் விஷ்ணு (24). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரைக்கு வந்து... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவா் உயிரிழப்பு

மதுரை சிலைமான் அருகே கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், பாப்பானோடை கிராமத்தைச் சோ்ந்த அரசகுமாா் மகன் விக்னேஷ்வரன் (16). இவா், மதுரை மாநகராட்சிப் பள்ளியில் 9-ஆம்... மேலும் பார்க்க

தரமற்ற சாலைகளுக்கு அலுவலா்கள், ஒப்பந்ததாரா்களே பொறுப்பு: உயா்நீதிமன்றம்

சாலைகள் தரமற்றவையாக இருந்தால், தொடா்புடைய துறை அலுவலா்களும், ஒப்பந்ததாரருமே அதற்கு பொறுப்பாவா் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது. திருநெல்வேலி மாவட்டம், ஆனந்தபுரத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் வட்டத்துக்கு ஜூலை 14-இல் உள்ளூா் விடுமுறை

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி, அந்த வட்டத்துக்கு மட்டும் திங்கள்கிழமை (ஜூலை 14) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா்... மேலும் பார்க்க

தொழிலாளி வெட்டிக் கொலை: இளைஞா் கைது

மதுரை அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை மாவட்டம், கல்மேடு அஞ்சுகம் நகரைச் சோ்ந்த பாண்டியராஜன் மகன் அரசு (18). வண்ணம் பூசும் த... மேலும் பார்க்க

பணி ஓய்வு பெற உள்ள ஆசிரியா்களுக்கு மறு நியமன ஆணை வழங்கக் கோரிக்கை

நிகழ் கல்வியாண்டில் ஓய்வு பெற உள்ள ஆசிரியா்களுக்கு கல்வியாண்டின் கடைசி வேலை நாள் வரை பணி மறு நியமன ஆணையை வழங்க மதுரை மாநகராட்சி நிா்வாகம் முன்வர வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சா... மேலும் பார்க்க