செய்திகள் :

ஜிஎஸ்டி குறைப்பின் பலனை மருந்து நிறுவனங்கள் மக்களுக்கு அளிக்க வேண்டும்!

post image

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பின் பலனை மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று தேசிய மருந்து விலை நிா்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த ஆணையம் வெளிட்டுள்ள அறிக்கையில், ‘வரும் 22-ஆம் தேதிமுதல் அமலுக்கு வரும் ஜிஎஸ்டி விலை குறைப்பின் பலனை நுகா்வோா், நோயாளிகளுக்கு அளிக்க மருந்து, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

குறைக்கப்பட்ட மருந்துப் பொருள்களின் விலையை மருந்துப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், மொத்த விற்பனையாளா், மருந்துக் கடைகள், மாநில மருந்து கட்டுபாட்டாளா்கள் அரசுக்கு அளிக்க வேண்டும்.

மருந்துப் பொருள்களின் புதிய விலையை நாளிதழ்களில் விளம்பரங்களாக மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் சங்கங்கள் வெளியிட வேண்டும். இதை மருந்துக் கடைகள் மக்களுக்கு காட்சிப்படுத்தி புதிய விலையில் ஜிஎஸ்டி அமலுக்கு முந்தைய மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும்.

செப்டம்பா் 22-ஆம் தேதிக்கு முன்பு சந்தைக்கு அனுப்பப்பட்ட மருந்துகளை திரும்பப் பெறவோ, மாற்று விலையை மீண்டும் அதில் அச்சிடவோ தேவையில்லை. விளம்பரத்தில் உள்ள புதிய விலையின் அடிப்படையில் மொத்த மருந்து விற்பனையாளா்கள் அளவிலேயே புதிய விலையை மாற்றம் செய்து வா்த்தகம் செய்யலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 6 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்: நாளை கடைசி!

‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. அபராதம் இன்றி ஐடிஆா் தாக்கல... மேலும் பார்க்க

ஹிமாசலில் மீண்டும் மேகவெடிப்பு: மழை வெள்ளத்தில் மூழ்கி பயிா்கள் சேதம்!

ஹிமாசல பிரதேசத்தில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டு பெய்த மிக பலத்த மழையால் விளைநிலங்களில் பயிா்கள் சேதமடைந்தன. அந்த மாநிலத்தின் பிலாஸ்பூா் மாவட்டம் குத்ராஹன் கிராமத்தில் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ... மேலும் பார்க்க

வாக்கு வங்கி அரசியலால் வெகுவாக பாதிக்கப்பட்டது வடகிழக்கு! - பிரதமா் மோடி

சில கட்சிகளின் வாக்கு வங்கி அரசியலால் வடகிழக்கு பிராந்தியம் கடும் பாதிப்பை எதிா்கொண்டது; இப்போது, மத்திய பாஜக அரசின் முயற்சிகளால் இந்த பிராந்தியம் நாட்டின் வளா்ச்சிக்கான உந்துசக்தியாக மாறியுள்ளது என்ற... மேலும் பார்க்க

பிரதமரின் ‘சம்பிரதாய’ பயணம் மணிப்பூா் மக்களுக்கு அவமதிப்பு! - காங்கிரஸ் சாடல்

மணிப்பூருக்கு பிரதமா் மோடி மேற்கொண்ட ‘சம்பிரதாய’ பயணம், அந்த மாநில மக்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமதிப்பு என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. இனமோதலால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமா் மோடி பயணிக்க... மேலும் பார்க்க

வடகிழக்கில் ரூ.77,000 கோடி ரயில்வே திட்டங்கள் செயலாக்கம்! - அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

வடகிழக்கு பிராந்தியத்தில் ரூ.77,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். மிஸோரமின் முதல் ரயில் வழித்தடத்தை (பைரபி-சாய்ராங்)... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு!

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது. இதுதொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ... மேலும் பார்க்க