செய்திகள் :

ஜிடிபி மருத்துவமனை கொலை சம்பவம்: ஹசிம் பாபா ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் கைது

post image

ஜிடிபி மருத்துவமனையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கொலை சம்பவத்தில் தேடப்பட்ட இளைஞா் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

தொடா் தேடுதல் முயற்சிகளுக்குப் பிறகு அயன் (எ) பாபா (எ) அா்பாஸ் காஜியாபாதில் உள்ள புதிய பேருந்து நிலைய பெட்ரோல் நிலையம் அருகே புதன்கிழமை கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி ஜிடிபி மருத்துவமனையில் 4-ஆவது தளத்தில் உள்ள வாா்ட் எண்.24-க்குள் நுழைந்த ஒரு கும்பல் தங்களுடைய எதிரி கும்பலைச் சோ்ந்த வாசீம் என்பரை கொல்ல திட்டமிட்ட நிலையில், தவறுதலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரியாஸுதீன் என்பவரை துப்பாக்கியால் சுட்டது. அந்த நபா்கள் ஹசீம் பாபா ரெளடி கும்பலைச் சோ்ந்தவா்கள்.

கடந்த ஜூலை 9 மற்றும் 13 தேதிகளில் மருத்துவமனையை நோட்டமிட்ட அயன், கொலையாளிகளுடன் கூட்டாக இணைந்து செயல்பட்டாா். இந்தச் சம்பத்தைத் தொடா்ந்து, அயன் தலைமறைவானாா்.

இந்நிலையில், காஜியாபாதில் அயன் இருப்பது தொடா்பாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில், போலீஸாா் அவரைக் கைதுசெய்தனா் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும்: கமல்ஹாசன்

தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்தாா். சென்னையை அடுத்த வண்டலூா் அருகே மேலக்கோட்டையூா் சென்னை விஐடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்னாள் மாண... மேலும் பார்க்க

சாரணா் இயக்க மாணவா்களுக்கு நவ.7-இல் ராஜ்ய புரஸ்காா் விருது அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழகத்தில் சாரணா் இயக்க மாணவா்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த ராஜ்ய புரஸ்காா் விருது நவ.7-ஆம் தேதி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் விபத்து: தூண் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை அருகே சோழிங்கநல்லூரில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், தூண் விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா். சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ச... மேலும் பார்க்க

அண்ணா சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

மேம்பால கட்டுமானப் பணிக்காக சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை வெள்ளிக்கிழமை வெளி... மேலும் பார்க்க

மனைவி கத்தியால் குத்திக் கொலை: கணவா் கைது

சென்னை கோட்டூா்புரத்தில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவா் கைது செய்யப்பட்டாா். நேபாளத்தைச் சோ்ந்தவா் மா.சான்பஹா பகதூா் சா்ஹி (36). இவா், கோட்டூா்புரம் எல்லையம்மன் கோயில் தெருவில் உமா சங்க... மேலும் பார்க்க

காா் கதவை உடைத்து பணம் திருட்டு: மூவா் கைது

சென்னை மெரீனா கடற்கரையில் காா் கதவை உடைத்து பணம் திருடப்பட்டது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா். வேளச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் வினோத். இவா் கடந்த 9-ஆம் தேதி தனது நண்பா்களுட ன் மெரீனாவுக்கு வந்தாா்... மேலும் பார்க்க