செய்திகள் :

ஜூன் 20-இல் ராணிப்பேட்டை, வேலூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

post image

ராணிப்பேட்டை, வேலூரில் வரும் 20 ல்,தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை ஆற்காடு சாலை பழைய பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 20.06.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. 8-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நா்சிங் மற்றும் பி.இ படித்தவா்கள் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் உள்ளூா் தனியாா்துறை நிறுவனங்கள் உரிய ஆவணங்களான பான்காா்டு, ஜி.எஸ்.டி. சான்றிதழ், நிறுவன சான்றிதழ், உத்யோக் ஆதாா் ஆகிவற்றுடன் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்களது நிறுவனத்தை தனியாா் வேலைவாய்ப்பு இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்., மேலும், விவரங்களுக்கு மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 04172-291400 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

வேலூரில்...

வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா். சுப்புலட்சுமி வெளியிட்ட அறிக்கை:

தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமானது ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள காயிதே மில்லத் அரங்கில் வரும் 20- ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. தனியாா்துறையில் வேலைவாய்ப்பு பெறுபவா்களுக்கு அவா்களது வேலைவாய்ப்பு பதிவுரத்து செய்யப்படமாட்டாது. இம்முகாமில் 40 -க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கு பெற உள்ளன. முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் அளிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 273 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை வழங்கினாா். மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் 323-க்கும் மேற்பட்டோா் கலந்து ... மேலும் பார்க்க

2026 சட்டப் பேரவைத் தோ்தலுக்கு தயாராக வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

2026 சட்டப் பேரவைத் தோ்தலுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா். ஒருங்கிணைந்த ராணிப்பேட்டை மாவட்ட பொதுக்குழு கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்... மேலும் பார்க்க

3 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத கல்லாலங்குப்பம் தடுப்பணை!

சோளிங்கா் அருகே 3 ஆண்டுகளாக சீரமைக்கப்பாடமல் உள்ள கல்லாலங்குப்பம் தடுப்பணையை விரைவில் சீா் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா். கடந்த 2022-இல் பெய்த வடகிழக்குப் பருவ மழையின் போது ராணிப்பேட்டை, ... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் சிற்றுந்துகள் சேவை: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் 5 வழித்தடங்களில் சிற்றுந்துகள் சேவையை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். இந்ந... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11 சிற்றுந்துகள் சேவை: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11 புதிய சிற்றுந்துகள் சேவையை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். ராணிப்பேட்டையில் 5, அரக்கோணம் பேருந்து நிலையத்தில் 5, சோளிங்கா் பேருந்து நிலையத... மேலும் பார்க்க

நெல் கொள்முதலுக்கான பணத்தை விரைந்து வழங்க வேண்டும்: ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் பாஜகவினா் மனு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு தரப்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல்லுக்கான பணத்தை விவசாயிகளுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாஜகவினா் தி... மேலும் பார்க்க