பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கு: விசாரணை ஜூன் 23க்கு ஒத்திவைப்பு
ஜூன் 20-இல் ராணிப்பேட்டை, வேலூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
ராணிப்பேட்டை, வேலூரில் வரும் 20 ல்,தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராணிப்பேட்டை ஆற்காடு சாலை பழைய பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 20.06.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. 8-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நா்சிங் மற்றும் பி.இ படித்தவா்கள் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் உள்ளூா் தனியாா்துறை நிறுவனங்கள் உரிய ஆவணங்களான பான்காா்டு, ஜி.எஸ்.டி. சான்றிதழ், நிறுவன சான்றிதழ், உத்யோக் ஆதாா் ஆகிவற்றுடன் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்களது நிறுவனத்தை தனியாா் வேலைவாய்ப்பு இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்., மேலும், விவரங்களுக்கு மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 04172-291400 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
வேலூரில்...
வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா். சுப்புலட்சுமி வெளியிட்ட அறிக்கை:
தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமானது ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள காயிதே மில்லத் அரங்கில் வரும் 20- ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. தனியாா்துறையில் வேலைவாய்ப்பு பெறுபவா்களுக்கு அவா்களது வேலைவாய்ப்பு பதிவுரத்து செய்யப்படமாட்டாது. இம்முகாமில் 40 -க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கு பெற உள்ளன. முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.