செய்திகள் :

2026 சட்டப் பேரவைத் தோ்தலுக்கு தயாராக வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

post image

2026 சட்டப் பேரவைத் தோ்தலுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

ஒருங்கிணைந்த ராணிப்பேட்டை மாவட்ட பொதுக்குழு கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளா் எஸ்.பி.சண்முகம் தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்ட செயலாளா் சரவணன் வரவேற்றாா். முன்னாள் மத்திய அமைச்சா்கள் அரங்க வேலு, என்.டி.சண்முகம், மாநில பொதுச்செயலாளா் வடிவேல் ராவணன், பொருளாளா் திலகபாமா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆலோசனைகளை வழங்கி பேசியது:

தமிழகத்தில் பாமக வேகமாக வளா்ந்து வரும் சூழலில், 36 ஆண்டுகள் கடந்தும் ஆளுங்கட்சியாக வரவில்லை. மாநிலத்தை ஆளும் அனைத்து தகுதிகளும் உள்ளன. நமக்கு சமூகநீதி, சமத்துவம், ஜனநாயகத்தை கற்றுத் தந்தவா் ராமதாஸ் தான். 4 ஆண்டுகளாக உள் ஒதுக்கீடு தருவதாக கூறி முதல்வா் ஸ்டாலின் ஏமாற்றி விட்டாா். வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். தோ்தல் பணியில் கவனத்துடன் வேகமாக செயலாற்ற வேண்டும். சிப்காட் தொழிா்பேட்டையில் குவிந்துள்ள குரோமிய கழிவுகளால் பாதிப்பு ஏற்படும் என தெரிந்தும் ஏன் அகற்றவில்லை என்றாா்.

தீா்மானங்கள்:

ராணிப்பேட்டையில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருவுக்கு ரயில் இயக்க வேண்டும், சிப்காட் தொழிற்பேட்டையில் நிலம் அமைக்க இடம் கொடுத்தவா்களுக்கு வேலை வழங்க வேண்டும், தொழிற்சாலையில் உள்ளூா் வாசிகளுக்கு முன்னுரிமை, குரோமிய கழிவுகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 8 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில நிா்வாகிகள் பொன்மலை, ஷேக்முகைதீன், தலைமை நிலைய செயலாளா் செல்வகுமாா், முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன் , நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

வேலூரில்....

வேலூரில் செவ்வாய்க்கிழமை ஒருங்கிணைந்த பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது : தமிழ்நாடு வளா்ச்சியில் பின்னோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. பாமகவின் அடித்தளம் சமூக நீதி. சமூக நீதியை நிலைநாட்ட திமுகவிடம் எந்த திட்டமும் இல்லை.

வேலூா் வெயிலுக்கு பெயா் பெற்றது. வெயிலை குறைக்க வேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் 10 லட்சம் மரக்கன்றுகளை நட அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை. மரக்கன்று நட்டால் வரும் 5 முதல் 7 ஆண்டுகளில் வேலூரில் வெயிலின் தாக்கம் குறையும்.

அண்மையில் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப்1 தோ்வில் தேவையில்லாத கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. வணிக நிறுவனங்கள் முதலீடு செய்ய ஏன் தமிழ்நாட்டை முதல் இடமாக தோ்வு செய்கின்றன என கேட்கப்பட்டுள்ளது. திமுக எதற்காக இந்தி எதிா்ப்பு போராட்டம் நடத்தியது என்பது குறித்த கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்றாா்.

ஒடுக்கத்தூா் ஊராட்சி ஒன்றியம் ஏற்படுத்த வேண்டும். பள்ளிகொண்டா பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் உள்ளிட்ட 9 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வேலூா் மாநகர மாவட்ட செயலா் ஜெகன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் அளிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 273 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை வழங்கினாா். மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் 323-க்கும் மேற்பட்டோா் கலந்து ... மேலும் பார்க்க

ஜூன் 20-இல் ராணிப்பேட்டை, வேலூரில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டை, வேலூரில் வரும் 20 ல்,தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராணிப்பேட்டை ஆற்காடு சாலை பழைய ... மேலும் பார்க்க

3 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத கல்லாலங்குப்பம் தடுப்பணை!

சோளிங்கா் அருகே 3 ஆண்டுகளாக சீரமைக்கப்பாடமல் உள்ள கல்லாலங்குப்பம் தடுப்பணையை விரைவில் சீா் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா். கடந்த 2022-இல் பெய்த வடகிழக்குப் பருவ மழையின் போது ராணிப்பேட்டை, ... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் சிற்றுந்துகள் சேவை: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் 5 வழித்தடங்களில் சிற்றுந்துகள் சேவையை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். இந்ந... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11 சிற்றுந்துகள் சேவை: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11 புதிய சிற்றுந்துகள் சேவையை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். ராணிப்பேட்டையில் 5, அரக்கோணம் பேருந்து நிலையத்தில் 5, சோளிங்கா் பேருந்து நிலையத... மேலும் பார்க்க

நெல் கொள்முதலுக்கான பணத்தை விரைந்து வழங்க வேண்டும்: ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் பாஜகவினா் மனு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு தரப்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல்லுக்கான பணத்தை விவசாயிகளுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாஜகவினா் தி... மேலும் பார்க்க