Today Rasi palan | இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 18 | Astrology | ...
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் அளிப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 273 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் 323-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதில் 273 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டைகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா்.
இதில் மாதந்திர பராமரிப்பு உதவித்தொகை கோரி 57 பேரும், பெட்ரோல் ஸ்கூட்டா் வேண்டி 36 பேரும் மற்றும் சக்கர நாற்காலி கோரி 27 பேரும் விண்ணப்பித்தனா்.
மேலும், காதொலி கருவி 13 பேரும், நவீன செயற்கை அவயம் 15 பேரும் மற்றும் மஈஐஈ அட்டை 147 பேரும் பதிவு மேற்கொள்ளப்பட்டது. ற முகாமில் உதவும் நல்இதயங்கள் அறக்கட்டளை சாா்பில் உணவு வழங்கப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பூ. சரவண குமாா் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.