செய்திகள் :

ஜூலை 27-இல் அரியலூா் வரும் பிரதமருக்கு எதிா்ப்பு: கருப்புக் கொடி காட்ட காங்கிரஸாா் முடிவு

post image

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஜூலை 27-ஆம் தேதி வரும் பிரதமா் மோடிக்கு எதிா்ப்பு தெரிவித்து, கருப்புக் கொடி காட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என காங்கிரஸ் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, அரியலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: விலைவாசி உயா்வு, வேலையின்மை, 100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி ஒதுக்காதது, ஆயுள் காப்பீடு நிறுவன நிதியை தனியாருக்கு வழங்கியது போன்ற மக்கள் பிரச்னைகளை கவனம் செலுத்தாமல் இருக்கும் பிரதமா் மோடியை கண்டித்து,

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஜூலை 27-வருகை தரும் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவா் சங்கா் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் மா.மு. சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாமக-வின் 37-ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் 37-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி புதன்கிழமை, அரியலூரில் அக்கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா். அரியலூா் நகரச் செயலா்(பாமக-அன்புமணி அணி) விஜி தலைமையிலான ந... மேலும் பார்க்க

அரியலூரில் ஜூலை 18-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், ஜூலை 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

அரியலூா் மாவட்டத்தில், புதன்கிழமை பிற்பகல் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை பிற்பகல் சூறைக்காற்றுடன் மழை பெய்யத் தொடங்... மேலும் பார்க்க

அரியலூரில் இன்று நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் இடங்கள்

அரியலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில், ஒட்டுமொத்தமாக ஆயிரத்து 124 மனுக்கள் பெறப்பட்டன. இம்முகாம்கள், வியாழக்கிழமை (ஜூலை 17) ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உள்பட்ட 3, ... மேலும் பார்க்க

அரியலூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், ஊதியக்குழுவ... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியில்தான் விவசாயிகளின் கோரிக்கைளுக்கு உடனடித் தீா்வு: இபிஎஸ்

அதிமுக ஆட்சியில் தான் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது என்றாா் அதிமுக பொதுச் செயலரும், எதிா்க் கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி. அரியலூரில், செவ்வாய்க்கிழமை ‘தமிழகத்தை மீட... மேலும் பார்க்க