செய்திகள் :

டபிள்யூபிஎல்: 3-ஆவது முறையாக இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற தில்லி..! பயிற்சியாளர் கூறியதென்ன?

post image

மகளிர் பிரீமியர் லீக்கில் பரபரப்பான இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய தில்லி அணி 141/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. தில்லி அணியை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

கடந்தாண்டு ஆர்சிபியுடன் தோற்ற தில்லி இந்தமுறை மும்பையுடன் தோற்றது.

3ஆவது முறையாக இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற தில்லி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜோனதன் பேட்டி கூறியதாவது:

வீராங்கனைகளைக் குறைக்கூற முடியாது

இந்த நேரத்தில் அனைவரும் அதிகமாக காயப்படுகிறோம். இந்த ஆடுகளத்தில் 99 சதவிகதம் முறை 150 ரன்களை எளிதாக சேஸ் செய்திருக்கலாம் என நினைக்கிறேன்.

மும்பை அணியினர் இதைக் கடினமாக்கினர். எந்த நேரத்திலும் நாங்கள் முன்னிலை பெறமுடியவில்லை.

போட்டி முழுவதும் நாங்கள் ஆட்டத்தில் இருந்தோம். ஆனால், கடைசியில் இலக்கை அடைய முடியவில்லை.

இந்தப் பெண்கள் நேர்மறையான எண்ணத்துடன் விளையாடினார்கள். அவர்களை குறைக்கூற முடியாது. நம்பிக்கையுடன் விளையாடினார்கள். அவர்களுக்கு மனத்தடை எதுவும் இல்லை.

3 முறையும் தோற்றது துரதிஷ்டவசம்

180 ரன்கள்தான் போதுமான இலக்காக எண்ணினோம். அதனால், 150 எளிதென நினைத்தோம். ஆனால், நாங்கள் அனைவரும் இப்போது வருத்தப்படுகிறோம்.

என்ன தவறாக நடந்ததென சிறிது நேரமெடுத்து சிந்திக்க வேண்டும். அதுதான் கிரிக்கெட்டும்கூட. இரண்டு தரமான அணிகள் விளையாடினால் இப்படித்தான் ஆகும்.

கடைசி 2 பந்தில் தோற்றோம். அது எப்படி வேண்டுமானாலும் சென்றிருக்கலாம்.

3 இறுதிப் போட்டிகளிலும் தோல்வியுற்றதுக்கு பொதுவான காரணம் எதுவும் நினைக்கவில்லை. கண்டிப்பாக ஒரு அணி வெல்லும், மற்றது தோற்கும்.

துரதிஷ்டவசமாக நாங்கள் 3 முறையும் தோல்வியின் பக்கம் இருந்து விட்டோம் என்றார்.

ஹாரி ப்ரூக்குக்கு பிசிசிஐ விதித்த தடை கடுமையானதா? மொயின் அலி பதில்!

ஐபிஎல் தொடரில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஹாரி ப்ரூக் விளையாட பிசிசிஐ தடை விதித்தது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மொயின் அலி பேசியுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் வருகிற மார்ச் 22 ஆம் தேத... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய உம்ரான் மாலிக்; கேகேஆர் அணியில் மாற்று வீரர் சேர்ப்பு!

ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக உம்ரான் மாலிக் விலகியுள்ளார்.ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்ப... மேலும் பார்க்க

பஞ்சாப் கிங்ஸில் ஆப்கன் ஆல்ரவுண்டர் இணைவதில் தாமதம்; காரணம் என்ன?

ஐபிஎல் தொடருக்காக தயாராகி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் இணைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இன்னும் சில தினங்களில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளின் வீரர்க... மேலும் பார்க்க

கடந்த சீசனில் கேப்டன், இந்த முறை துணைக் கேப்டன்; தில்லி கேபிடல்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தில்லி கேபிடல்ஸ் அணியின் துணைக் கேப்டனை அந்த அணி நிர்வாகம் இன்று (மார்ச் 17) நியமித்துள்ளது.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பி... மேலும் பார்க்க

ஐபிஎல்: சென்னை - மும்பை போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் மார்ச் 19-ல் விற்பனை!

ஐபிஎல் 2025 தொடரின் சென்னை - மும்பை அணிகளுக்கான போட்டி மார்ச் 23-ல் சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை மார்ச் 19 அன்று தொடங்குகிறது.ஐபிஎல் 2025 தொடர் வருகின்ற மார்ச்... மேலும் பார்க்க

மறக்க முடியாத பரிசளித்த தோனி: அஸ்வின் நெகிழ்ச்சி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனக்கு மறக்க முடியாத பரிசளித்ததாக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.சென்னையில் சிஎஸ்கே அணி குறித்து எழுத... மேலும் பார்க்க