செய்திகள் :

டபிள்யூபிஎல்: 3-ஆவது முறையாக இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற தில்லி..! பயிற்சியாளர் கூறியதென்ன?

post image

மகளிர் பிரீமியர் லீக்கில் பரபரப்பான இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய தில்லி அணி 141/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. தில்லி அணியை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

கடந்தாண்டு ஆர்சிபியுடன் தோற்ற தில்லி இந்தமுறை மும்பையுடன் தோற்றது.

3ஆவது முறையாக இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற தில்லி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜோனதன் பேட்டி கூறியதாவது:

வீராங்கனைகளைக் குறைக்கூற முடியாது

இந்த நேரத்தில் அனைவரும் அதிகமாக காயப்படுகிறோம். இந்த ஆடுகளத்தில் 99 சதவிகதம் முறை 150 ரன்களை எளிதாக சேஸ் செய்திருக்கலாம் என நினைக்கிறேன்.

மும்பை அணியினர் இதைக் கடினமாக்கினர். எந்த நேரத்திலும் நாங்கள் முன்னிலை பெறமுடியவில்லை.

போட்டி முழுவதும் நாங்கள் ஆட்டத்தில் இருந்தோம். ஆனால், கடைசியில் இலக்கை அடைய முடியவில்லை.

இந்தப் பெண்கள் நேர்மறையான எண்ணத்துடன் விளையாடினார்கள். அவர்களை குறைக்கூற முடியாது. நம்பிக்கையுடன் விளையாடினார்கள். அவர்களுக்கு மனத்தடை எதுவும் இல்லை.

3 முறையும் தோற்றது துரதிஷ்டவசம்

180 ரன்கள்தான் போதுமான இலக்காக எண்ணினோம். அதனால், 150 எளிதென நினைத்தோம். ஆனால், நாங்கள் அனைவரும் இப்போது வருத்தப்படுகிறோம்.

என்ன தவறாக நடந்ததென சிறிது நேரமெடுத்து சிந்திக்க வேண்டும். அதுதான் கிரிக்கெட்டும்கூட. இரண்டு தரமான அணிகள் விளையாடினால் இப்படித்தான் ஆகும்.

கடைசி 2 பந்தில் தோற்றோம். அது எப்படி வேண்டுமானாலும் சென்றிருக்கலாம்.

3 இறுதிப் போட்டிகளிலும் தோல்வியுற்றதுக்கு பொதுவான காரணம் எதுவும் நினைக்கவில்லை. கண்டிப்பாக ஒரு அணி வெல்லும், மற்றது தோற்கும்.

துரதிஷ்டவசமாக நாங்கள் 3 முறையும் தோல்வியின் பக்கம் இருந்து விட்டோம் என்றார்.

சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் போட்டி குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசியுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் த... மேலும் பார்க்க

இந்திய அணி வீரர்களுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பயணிப்பது சரியா? விராட் கோலி பதில்!

இந்திய அணி வீரர்கள் கிரிக்கெட் தொடர்களுக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அவர்களுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பயணிப்பது குறித்து இந்திய அணியின் விராட் கோலி பேசியுள்ளார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரா... மேலும் பார்க்க

பிசிசியின் விதிமுறைகள் வருத்தமளிக்கின்றன: விராட் கோலி

குடும்பங்களுடன் கிரிக்கெட் விளையாடுவதை விராட் கோலி ஆதரித்து பேசியுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படுவதை தடுக்கும் வகையிலும், அணியில் ஒழுக்கம், ஒற்றுமை ஆக... மேலும் பார்க்க

லா லீகா தொடர்: எம்பாப்பே 2 கோல்கள், ரியல் மாட்ரிட் முதலிடம்!

லா லீகா கால்பந்து தொடரில் வில்லார்ரியல் அணியுடன் மோதிய ரியல் மாட்ரிட் அணி 2-1 என வென்றது.வில்லார்ரியல் அணியின் வீரர் ஜுவான் போய்த் 7ஆவது நிமிஷத்தில் முதல் கோல் அடித்தார். 2 கோல்கள் அடித்த எம்பாப்பேஅடு... மேலும் பார்க்க

முதல் டி20: 10 ஓவர்களில் நியூசி. அபார வெற்றி!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20யில் நியூசி. 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்க... மேலும் பார்க்க

தில்லியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் 2-வது முறையாக சாம்பியன்!

மகளிர் பிரீமியர் லீக்கில் பரபரப்பான இறுதிப் போட்டியில் தில்லி அணியை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்.மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பையில் நடைபெற்ற இறுதிப்போட்டி... மேலும் பார்க்க