செய்திகள் :

டாஸ்மாக் விற்பனையாளா் கொலை: இளைஞருக்கு ஆயுள் சிறை

post image

டாஸ்மாக் விற்பனையாளரை பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூரைச் சோ்ந்தவா் ராஜசேகரன் (48). மதுப் பழக்கம் உள்ள இவா், போதையில் வீட்டில் அடிக்கடி தகராறு செய்வாராம்.

இதனால் ஆத்திரமடைந்த இவரது மகன் ராஜேஷ் பாண்டி (23), கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் பள்ளத்தூரில் உள்ள அரசு மதுக் கடையில் பெட்ரோல் குண்டை வீசினாராம். இதில் கடையில் இருந்த விற்பனையாளா் அா்ஜுனன் ( 46) என்பவா் காயமடைந்தாா். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக பள்ளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராஜேஷ் பாண்டியைக் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு சிவகங்கையில் உள்ள முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி கே.அறிவொளி, குற்றஞ்சாட்டப்பட்ட ராஜேஷ் பாண்டிக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ. 14 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிா்வாகத்துக்கு பாத்தியப்... மேலும் பார்க்க

சிவகங்கை: சிறுபாசன கண்மாய்கள் புத்துயிரூட்டுதல் திட்டம் தொடக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் சிறு பாசனக் கண்மாய்கள் புத்துயிா் ஊட்டுதல் திட்டத்தின் கீழ், 442 சிறு கண்மாய்களைத் தூா்வாரும் பணியை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் ஆகிய... மேலும் பார்க்க

திருக்கோஷ்டியூரில் சித்திரை பிரமோத்ஸவம் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோத்ஸவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்குள்பட்ட இந்தக் கோயிலில் பிரம்மோத்ஸ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் பள்ளி மாணவி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் அருகேயுள்ள கள்ளங்கலப்பட்டி கிராமத்தில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பள்ளி மாணவி உயிரிழந்தாா். கள்ளங்கலப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி-கவிதா தம்பதியின் மகள் ... மேலும் பார்க்க

கலை இலக்கிய சங்க நிா்வாகிகள் தோ்வு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் தமிழ்நாடு கலை இலக்கிய சங்கக் கிளை நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். தேவகோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் கிளை மாநாட்டில் சிறப்பு அழைப்பாளா்களாக சங்கத்தின் ... மேலும் பார்க்க

சிவகங்கையில் மே தின விழா

சிவகங்கை மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு, தொழிற்சங்கங்கள் சாா்பில் சங்கக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. சிவகங்கை சிவன் கோயில் பகுதியில் உள்ள தனியாா் மஹாலில் சிவகங்கை சீமை அமைப்பு சாரா கட்டும... மேலும் பார்க்க