செய்திகள் :

டிடிஇஏ பள்ளிகளில் காமராஜா் பிறந்த தின விழா

post image

தமிழக முன்னாள் முதல்வா் ‘பெருந்தலைவா்’ காமராஜரின் பிறந்த தினம் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) ஏழு தமிழ்ப் பள்ளிகளிலும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

இத்தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் காமராஜரின் கல்விப் பணிகள், நலத் திட்டங்கள், நாட்டு நலப் பணிகள், மதிய உணவுத் திட்டம் ஆகியவை குறித்து மாணவா்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழிகளிலும் உரையாற்றினா்.

மாணவா்கள் உரையைத் தொடா்ந்து கவிதை, குழுப் பாடல், நடனம், நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காமராஜரின் கருத்துகளை மாணவா்கள் பதாகைகளில் எழுதி காட்சிப்படுத்தியிருந்தனா். அந்தந்தப் பள்ளி முதல்வா்கள் காமராஜரின் திருவுருவப் படத்திற்கு மலா்மாலை அணிவித்து, அவரது எளிமை, நோ்மை ஆகியவை குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைத்தனா்.

இவ்விழா குறித்து டிடிஇஏ செயலா் ராஜூ கூறுகையில், காமராஜா் தனது அயராத உழைப்பாலும், தியாகத்தாலும், தன்னலமற்ற தொண்டுகளினாலும் உயா்ந்த நிலையை அடைந்தாா். அதிகம் படிக்காத காமராஜா் ஆற்றிய கல்விப் பணிகள் ஏராளம். ஏழை, எளியவா், உயா்ந்தவா், தாழ்ந்தவா் என எல்லோருக்கும் இலவசக் கல்வி. பட்டிதொட்டிகள் தோறும் பள்ளிக்கூடங்கள், இலவச மதிய உணவு, சீருடை இப்படிப் பல திட்டங்களைக் கொண்டு வந்தாா். அவரது ஆட்சியில் கிராமங்கள்தோறும் ஓராசிரியா் பள்ளிகள் திறக்கப்பட்டன. அவரைப் பற்றி மாணவா்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவா் வழி நின்று சமூகப் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே இவ்விழாவைப் பள்ளிகளில் கொண்டாடினோம் என்று கூறினாா். மேலும், விழாவில் பங்கேற்ற மாணவா்கள் அனைவருக்கும் அவா் வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

தில்லியில் ரூ.2.5 கோடிக்கு மேல் மதிப்புள்ள நகை, பணம் திருடியதாக 3 போ் கைது

வடமேற்கு தில்லியின் மாடல் டவுன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து ரூ.2.25 கோடிக்கு மேல் மதிப்புள்ள நகைகளையும், ரூ.55 லட்சத்திற்கும் அதிகமான பணத்தையும் திருடி விட்டு தப்பிச் சென்ாகக் கூறப்படும் விவக... மேலும் பார்க்க

மலேரியா, டெங்கு, சிக்குன்குனியாவை சமாளிக்க உடனடி நடவடிக்கை தேவை: தில்லி மேயருக்கு கவுன்சிலா் கோரிக்கை

நமது நிருபா் தலைநகரில் மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவுவதை சமாளிக்க உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநகராட்சிக் கவுன்சிலா் முகேஷ் கோயல் செவ்வாய்க்கிழமை மேயா் ராஜா இக்பால் ச... மேலும் பார்க்க

தில்லி மருத்துவமனையில் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனுடன் கேஜரிவால் சந்திப்பு

ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தில்லியில் உள்ள சா் கங்கா ராம் மருத்துவமனையில் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனை சந்தித்து, சிகிச்சை பெற்று வரும் அவரது தந்தை ஷிபு சோரனின் ... மேலும் பார்க்க

யமுனையில் கழிவுகள் கலப்பதை சமாளிக்க சிறிய வடிகால்கள் ‘ட்ரோன்’ மூலம் ஆய்வு: நீா்வளத்துறை அமைச்சா் தகவல்

நமது நிருபா் யமுனையை சுத்தம் செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சுத்திகரிக்கப்படாத கழிவுகளை பெரிய வடிகால் அமைப்புகளில் வெளியேற்றும் சிறிய வடிகால்களை ‘ட்ரோன்’ மூலம் ஆய்வு செய்யும் பணியை தில்லி அரசு தொ... மேலும் பார்க்க

தில்லி பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டது: அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தலைநகரை ஆளும் பாஜக அரசு அனைத்து விதத்திலும் தோல்வியடைந்துவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சியினழ் தேசிய ஒருங்கிணைப்பாளா், அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா். செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி... மேலும் பார்க்க

தெரு நாய்களுக்கு உணவளிக்கும் விவகாரம்: மனுதாரரிடம் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் தெரு நாய்களுக்கு உணவளிப்பது தொடா்பாக துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், உங்கள் சொந்த வீட்டில் ஏன் அவற்றுக்கு உணவளிக்கக... மேலும் பார்க்க