செய்திகள் :

டிராகனும், யானையும் இணைய வேண்டும்: மோடியிடம் பேசிய சீன அதிபர்!

post image

இந்தியாவும் சீனாவும் நண்பர்களாக இருப்பது அவசியம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

வரி விதிப்பின் மூலம் உலக நாடுகளிடையே நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ள நிலையில், நல்ல அண்டை நாடாகவும், நண்பர்களாகவும் இருப்பது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி சீனாவின் தியான்ஜின் நகருக்குச் சனிக்கிழமை (ஆக. 30) மாலை சென்றார். அங்கு அவருக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைஒத் தொடர்ந்து தியான்ஜின் நகரில் எஸ்சிஓ உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். முன்னதாக, மாநாட்டிற்கு வந்த பிரதமர் மோடியை சீன அதிபர் ஷி ஜின்பிங் கைக்குலுக்கி வரவேற்றார்.

உலக அளவில் ஏற்பட்டுவரும் நெருக்கடி மற்றும் மாற்றங்களுக்கு மத்தியில், இந்தியா - சீனா இடையிலான ஒத்துழைப்பின் அவசியம் குறித்து ஷி ஜின்பிங் மோடியுடன் பேசினார்.

''மாற்றத்தை நோக்கி உலக நாடுகள் சென்றுகொண்டிருக்கின்றன. சீனாவும் இந்தியாவும் மிகப்பெரிய அளவில் நாகரீகமடைந்த நாடுகள். உலகளாவிய தெற்கின் ஒரு பகுதியாகவும், அதிக மக்கள் தொகை கொண்ட இரு நாடுகளாகவும் இருக்கிறோம்'' எனக் குறிப்பிட்டார்.

மேலும், ''சிறந்த அண்டை நாடுகளாகவும் நல்ல நண்பர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம். டிராகனும், யானையும் ஒன்றாக இணைய வேண்டும்'' எனவும் தெரிவித்தார்.

கேதார்நாத் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு: இருவர் பலி!

கேதார்நாத் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சோன்பிரயாக் மற்றும் கௌரிகுண்ட் இடையே முன்கட்டியா அருகே இன்று காலை கால... மேலும் பார்க்க

பஞ்சாபில் வெள்ளம்: ஆளுநர், முதல்வரிடம் அமித் ஷா பேச்சு

பஞ்சாபில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, முதல்வர் பகவந்த் மான் ஆகியோரை தொடர்புகொண்டு மத்திய அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார். பஞ்சாபில் உள்ள பல மாவட்டங்களில் ஞாயிற்று... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு எஸ்சிஓ தலைவர்கள் கண்டன தீர்மானம்! பாகிஸ்தான் பிரதமரும்...

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த அமைப்பின் உறுப்பினர்களாகவுள்ள 10 நாடுகளின் தலைவர்களில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃ... மேலும் பார்க்க

சீனாவில் மோடி - புதின் ஒரே காரில் பயணம்!

சீனாவில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் பிரதமர் நரேந்திர மோடியும் ஒரே காரில் பயணித்தனர்.சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இரண்டு நாள் வருடாந்திர உச்சி மாநாடு... மேலும் பார்க்க

ரஷிய அதிபர் புதினுடன் மோடி சந்திப்பு!

சீனாவில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை காலை சந்தித்தார்.சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இரண்டு நாள் வருடாந்திர உச்சி மாநா... மேலும் பார்க்க

பஞ்சாப் வெள்ளம்: கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு செப். 3 வரை விடுமுறை

பஞ்சாபில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக் நிறுவனங்களுக்கு செப்டம்பர் 3 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் உள்ள பல மாவட்டங்களி... மேலும் பார்க்க