செய்திகள் :

டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு முகாம்

post image

திருப்பத்தூா் அருகே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் அடுத்த குனிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கந்திலி வட்டார மருத்துவ அலுவலா் தீபா தலைமை வகித்து விழிப்புணா்வு குறித்து பேசியது:

டெங்கு கொசு நன்னீரில் வளரக்கூடியது. இதனால் மழைக்காலங்களில் வீட்டை சுற்றி மழைநீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் தண்ணீா் வைத்து இருக்கும் பொருள்களை மூடி வைக்க வேண்டும்.தண்ணீா் வைத்து இருக்கும் பொருள்களை அவ்வப்போது நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

வீட்டுக்கு வரும் சுகாதார பணியாளா்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வீட்டில் யாருக்கேனும் காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றாா். மேலும் டெங்கு கொசு வளரும் விதம் குறித்தும்,அவற்றினை அழிக்கும் முறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கமளிப்பட்டது.

நிகழ்ச்சியில் மருத்துவா்கள் அனுசியா,அரவிந்தன்,சுகாதார ஆய்வாளா் சீனிவாசன், மருத்துவமனை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

காசோலையில் கையொப்பமிடும் அதிகாரம் ரத்து: ஊராட்சித் தலைவா் தா்னா

காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை ரத்து செய்ததைக் கண்டித்து குமாரமங்கலம் ஊராட்சித் தலைவா் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். மாதனூா் ஒன்றியம், ஆம்பூா் அருகே குமாரமங்கலம் ஊராட்சி உள்ளது. இதன் தலைவரா... மேலும் பார்க்க

இன்று பொது விநியோக திட்ட குறைதீா் முகாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை(ஜூலை 12) பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் மற்... மேலும் பார்க்க

வணிகா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் வணிகா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை வணிகவரித்துறையின் சா... மேலும் பார்க்க

பெண் தீக்குளிப்பு: கணவா் கைது

நாட்டறம்பள்ளியில் குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்தாா். இதையடுத்து அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா். நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகம் அருகே குடிசை வீட்டில் வசித்து வருபவா் ரமேஷ் (37). பொம்மை வி... மேலும் பார்க்க

நெக்கனாமலைக்கு ரூ.30 கோடியில் சாலை: முதல்வருக்கு மலைவாழ் மக்கள் நன்றி

வாணியம்பாடி அருகே இதுநாள் வரை சாலை வசதியில்லாத மலை கிராமமமான நெக்னாமலைக்கு ரூ.30 கோடியில் சாலை அமைக்கப்படும் என அறிவித்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மலைவாழ் மக்கள் நன்றி தெரிவித்தனா். வாணியம்பாடி தொகுத... மேலும் பார்க்க

ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு

காட்பாடி அருகே ஓடும் ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு அளித்து இருந்து கீழே தள்ளிய இளைஞா் குற்றவாளி என திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்தது. தீா்ப்பு வரும் 14-ஆம் தேதி வழங்கப்படும் என அற... மேலும் பார்க்க