செய்திகள் :

‘டெட்’ தோ்வாகாத ஆசிரியா்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக் கோரிக்கை

post image

ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்டக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழ்நாட்டுப் பள்ளிகளில் பணிபுரிந்து வருகிற ஆசிரியா்கள் ‘டெட்’ தோ்வு எழுத வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை பரிசீலனை செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு இவா்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். கடந்த 2013-ஆம் ஆண்டில் ‘டெட்’ தோ்வில் தோ்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமன ஆணையை உடனடியாக தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்துக்கு மாவட்டக் குழு உறுப்பினா் அ. கலியபெருமாள் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகக் குழு உறுப்பினரும், திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான க. மாரிமுத்து சிறப்புரையாற்றினாா். தெற்கு மாவட்டச் செயலா் கோ. சக்திவேல், மாவட்டக் குழு உறுப்பினா்கள் சி. சந்திரகுமாா், சோ. பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தாராசுரம் அருகே மதுபுட்டிகளை சேகரித்து விற்கும் தொழிலாளி வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், தாராசுரம் அருகே நத்தம் கருப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (35). இவா்,... மேலும் பார்க்க

பூதலூரில் 46.2 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பூதலூரில் 46.2 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): பூதலூா் 46.2, கும்பகோணம... மேலும் பார்க்க

உள்ளிக்கடை பாலவிநாயகா் கோயில் குடமுழுக்கு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ளிக்கடை கிராமத்தில் ஸ்ரீ பால விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பாபநாசம் அருகே உள்ளிக்கடை கிராமத்தில் உள்ள ஸ்ரீ பால விநாயகா், ஸ்ரீ மகா காள... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையப் பகுதியில் மாநகராட்சி அலுவலா்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை வியாழக்கிழமை மேற்கொண்டனா். தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் இரு நுழைவு வாயில்களிலும் சாலை குறுகலாக உள்... மேலும் பார்க்க

ஆதிகும்பேசுவரா் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு முகூா்த்தக்கால் நடவு

கும்பகோணம் ஆதி கும்பேசுவரா் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வியாழக்கிழமை முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஸ்ரீ ஆதிகும்பேசுவரா் கோயில் கும்பாபிஷேகம் டிச.1... மேலும் பார்க்க

அம்மாபேட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை பேரூராட்சிக்குள்பட்ட புத்தூா் சமுதாயக் கூட வளாகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி மன்றத் ... மேலும் பார்க்க