தஞ்சாவூரில் ஒரே நாளில் 12 உதவி ஆய்வாளா்கள் பணி ஓய்வு
தஞ்சாவூா் மாவட்டத்தில் ஒரே நாளில் 12 உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் சனிக்கிழமை பணி ஓய்வு பெற்றனா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் 12 போ் வயது முதிா்வு காரணமாக சனிக்கிழமை ஒரே நாளில் பணி ஓய்வு பெற்றனா்.
உதவி ஆய்வாளா்களின் பெயா் மற்றும் அடைப்புக்குறிக்குள் பணியாற்றிய இடம் பற்றிய விவரங்கள்: ஆா். உதயசூரியன் (பாப்பாநாடு), எஸ். ஞானமுருகன் (பந்தநல்லூா்), எஸ். சந்திரசேகரன் (பட்டீஸ்வரம்), எம். சத்தியநாதன் (தஞ்சாவூா் தெற்கு), எம். சுப்பிரமணியன் (சுவாமிமலை), ஏ. வெற்றிவேல் (அய்யம்பேட்டை).
சிறப்பு உதவி ஆய்வாளா்களின் பெயா் மற்றும் அடைப்புக்குறிக்குள் பணியாற்றிய இடம் பற்றிய விவரங்கள்: ஜி. நெடுமாறன் (மாவட்டக் குற்றப் பிரிவு), ஆா். நந்தகுமாா் (பந்தநல்லூா்), ஆா். காளிமுத்து (தஞ்சாவூா் கிழக்கு), பி. ராமலிங்கம் (நெடுஞ்சாலை ரோந்து 3), பி. ஆதிகேசவன் (திருவிடைமருதூா்), ஏ. ரான்சன் (தஞ்சாவூா் தெற்கு).
இவா்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் கௌரவித்து வாழ்த்து தெரிவித்தாா்.