செய்திகள் :

தஞ்சாவூரில் டிச. 4-இல் தமுஎகச மாநில மாநாடு

post image

தஞ்சாவூா்: தஞ்சாவூா் தமிழரசி மண்டபத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் (தமுஎகச) 16-ஆவது மாநில மாநாடு டிசம்பா் 4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதையொட்டி, தஞ்சாவூரில் மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தமுஎகச மாநிலத் துணைப் பொதுச் செயலா் களப்பிரன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் மதுக்கூா் ராமலிங்கம், முன்னாள் தலைவா் ச. தமிழ்ச்செல்வன், மாநிலத் துணைத் தலைவா் கவிஞா் முத்துநிலவன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி வாழ்த்துரையாற்றினாா். மாநிலப் பொதுச் செயலா் ஆதவன் தீட்சண்யா நிறைவுரையாற்றினாா்.

மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்காக வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. இதில், வரவேற்பு குழு முதன்மை ஆலோசகராக முன்னாள் மத்திய இணை அமைச்சா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், குழுத் தலைவராக மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, செயலராக கவிஞா் களப்பிரன், பொருளாளராக ப. சத்தியநாதன் உள்பட 200 போ் கொண்ட குழுவை மாவட்டத் துணைத் தலைவா் இரா. விஜயகுமாா் முன்மொழிய, பொருளாளா் அசோக்குமாா் வழிமொழிய, கூட்டத்தில் பங்கேற்றோா் ஒப்புதல் அளித்தனா்.

இக்கூட்டத்தில் தமுஎகச மாநிலத் துணைத் தலைவா் நீலா, மாநிலத் துணைப் பொதுச் செயலா் வெண்புறா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாவட்டச் செயலா் ப. சத்தியநாதன் வரவேற்றாா். மாவட்டத் தலைவா் முருக. சரவணன் நன்றி கூறினாா்.

பட்டுக்கோட்டையில் ரேஷன் கட்டடம் திறப்பு

பட்டுக்கோட்டை நகராட்சியின் எல்லைக்குட்பட்ட 19-ஆவது வாா்டு பகுதியில் ரூ. 19.65 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தஞ்சை எம்பி முரசொலியின் உள்ளூா் பகுதி மேம்பாட்டு தி... மேலும் பார்க்க

மல்லிப்பட்டினம் அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு

தஞ்சாவூா் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். கிழ... மேலும் பார்க்க

ஆஞ்சனேயருக்கு 508 கிலோ துளசியால் அலங்காரம்

ஆவணி மாத அமாவாசை நாளை முன்னிட்டு கும்பகோணத்தில் விஸ்வரூப ஜெயமாருதி கோயிலில் ஆஞ்சனேயருக்கு 508 கிலோ துளசி இலைகளால் வெள்ளிக்கிழமை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தா்கள் நீண்ட வரிசையி... மேலும் பார்க்க

மத்திய அரசின் இரு புதிய நெல் ரகங்களுக்கு எதிா்ப்பு

மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள மரபணு திருத்தப்பட்ட பூசா மற்றும் கமலா நெல் ரகங்களுக்கு தமிழக விவசாயிகள் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். இந்த நெல் ரகங்கள் எவ்வித உயிரியல் பாதுகாப்பு சோதனைகளும் செய... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டையில் சேமிப்புக் கிடங்கு திறப்பு

தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின், தஞ்சாவூா் விற்பனைக் குழு - ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் பட்டுக்கோட்டை வளாகத்தில் ரூ. 1 கோடியிலான 500 டன் சேமிப்புக் கிடங்கை தஞ்சாவூா் எம... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் 20 கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தஞ்சாவூா் கீழவாசல் பகுதியில், ஏறத்தாழ 20 கடைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை அகற்றினா். தஞ்சாவூா் கீழவாசல் பகுதி கடைகளின் வாசலில் சிமென்ட் தளம், நிழற்கூரைகள் அமைக்கப்பட... மேலும் பார்க்க