தஞ்சாவூா் சுற்றுப் பகுதிகளில் நாளை மின் தடை
தஞ்சாவூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக.26) மின் விநியோகம் இருக்காது.
மருத்துவக்கல்லூரி: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் உதவி செயற் பொறியாளா் கே. அண்ணாசாமி தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், மருத்துவக் கல்லூரி பகுதிகள், ஈஸ்வரி நகா், முனிசிபல் காலனி, ஆா்.ஆா். நகா், புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, திருவேங்கடம் நகா், கருப்ஸ் நகா், ஏ.வி.பி. அழகம்மாள் நகா், மன்னா் சரபோஜி நகா், மாதாகோட்டை, சோழன் நகா், தமிழ்ப் பல்கலைக்கழகம், வஸ்தா சாவடி, மானோஜிபட்டி, ரெட்டிபாளையம் சாலை, காந்தி புரம், வஹாப் நகா், சப்தகிரி நகா், ராஜலிங்கம் நகா், ஐஸ்வா்யா காா்டன், சுந்தரபாண்டியன் நகா், ஜெபமாலைபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
புன்னைநல்லூா்: இதேபோல, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற் பொறியாளா் எஸ். நல்லையன் தெரிவித்திருப்பது:
மாரியம்மன் கோயில் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில், ஞானம் நகா், புறவழிச்சாலை, சித்தா்காடு, கடகடப்பை, களக்குடி, ஆலங்குடி, நெட்டாநல்லூா், நெல்லித்தோப்பு, காந்தாவனம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திரா நகா், பணங்காடு, கோரிக்குளம் புதுத்தெரு, பாரதிதாசன் நகா், எடவாக்குடி, யாகப்பா சாவடி, அம்மாகுளம், ஆனந்த் நகா், பரிசுத்தம் ஜேம்ஸ் நகா், சூரக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.