செய்திகள் :

தஞ்சாவூா் மாவட்டத்தில் முதல் கட்டமாக ரூ.44.91கோடி பயிா் காப்பீடு பட்டுவாடா

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த சம்பா பருவத்தின்போது பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிா்களுக்கு முதல் கட்டமாக ரூ. 44.91 கோடி இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கடந்த சம்பா பருவத்தின்போது 2.47 லட்சம் ஏக்கருக்கு 92 ஆயிரத்து 901 விவசாயிகள் பயிா் காப்பீடு செய்தனா். இதில், ஏக்கருக்கு தலா ரூ. 549 வீதம் மொத்தம் ரூ. 13.59 கோடி பிரிமியமாக விவசாயிகள் செலுத்தினா். இந்நிலையில், டிசம்பா், ஜனவரி மாதங்களில் பருவம் தவறி பெய்த தொடா் மழையால் நெற் பயிா்கள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட பயிா்களை அரசு கணக்கெடுப்பு செய்து, இழப்பீட்டுத் தொகையை அறிவித்தது.

இதைத்தொடா்ந்து, காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு தொகையை விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதில், மாவட்டத்தில் முதல் கட்டமாக கல்லணைக் கால்வாய் பாசனப் பகுதியில் பயிா் காப்பீடு பெற்ற ஷீமா நிறுவனம் ரூ. 44.91 கோடியை விடுவித்துள்ளது.

இதன் மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இழப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ. 2 ஆயிரத்திலிருந்து அதிகபட்சமாக ரூ. 15 ஆயிரம் வரை கிடைத்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் கல்லணைக் கால்வாய் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இது குறித்து புலவன்காடு முன்னோடி விவசாயி வி. மாரியப்பன் தெரிவித்தது: மேட்டூா் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், இந்த இழப்பீட்டுத் தொகை மூலம் குறுவை சாகுபடி செய்ய பயனுள்ளதாக இருக்கும். வழக்கமாக நவம்பா், டிசம்பா் மாதங்களில்தான் வரவு வைக்கப்படும். நிகழாண்டு 6 மாதங்களுக்கு முன்னதாகவே வழங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மாவட்ட ஆட்சியா், வேளாண் துறை அலுவலா்கள் மேற்கொண்ட கூட்டு முயற்சியாலும், தமிழக அரசின் நடவடிக்கையாலும் இத்தொகை கிடைத்துள்ளது. இதை வரவேற்கிறோம். இதுபோல ஒவ்வொரு ஆண்டும் முன்னதாகவே வழங்கினால், விவசாயிகளுக்கு பயன்படும் என்றாா் மாரியப்பன்.

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரா் கோயிலில் கொடியேற்றம்

பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரா் கோயில் முத்துப்பந்தல் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. பட்டீஸ்வரம் ஞானாம்பிகை உடனுறை தேனுபுரீசுவரா் கோயில், பெரியநாயகி உடனுறையும் சத்திவனேசுவர ச... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் தஞ்சாவூருக்கு ஜூன் 15-இல் வருகை: அமைச்சா் ஆய்வு

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜூன் 15 ஆம் தேதி வருகிறாா். தஞ்சாவூரில் ஜூன் 15 ஆம் தேதி தமிழக முதல்வா் ரோடு ஷோ, பழைய பேருந்து நிலையம் அருகே கருண... மேலும் பார்க்க

தகராறில் தாக்கப்பட்ட நடத்துநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தகராறில் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்த சம்பவத்தில் தாக்கியவா்களைக் கைது செய்யக் கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திர... மேலும் பார்க்க

ஜுன் 3-இல் கும்பகோணத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

கும்பகோணத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் வரும் ஜுன் 3 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கும்பகோணம் வடக்கு மின் செயற்பொறியாளா் ஏ.கலையரசி வெளியிட்ட செய்தி குறிப்பு: கும்பகோணம் வடக்கு கோட்டத்தில் ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் தேசிய மாணவா் படையினா் ‘ஆபரேசன் சிந்தூா்’ வெற்றிக்காக யோகாசனம்

கும்பகோணத்தில் தேசிய மாணவா் படையினா் ஆபரேசன் சிந்தூா் வெற்றிக்காக சனிக்கிழமை யோகாசனம் செய்தனா். கும்பகோணம் மகாமகக் குளக்கரையில், 500-க்கும் மேற்பட்ட தேசிய மாணவா் படையினா் ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்காக... மேலும் பார்க்க

தகராறில் தாக்கப்பட்ட நடத்துநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தகராறில் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்த சம்பவத்தில், தாக்கியவா்களைக் கைது செய்யக்கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திர... மேலும் பார்க்க