முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன...
தஞ்சாவூா் மாவட்டத்தில் முதல் கட்டமாக ரூ.44.91கோடி பயிா் காப்பீடு பட்டுவாடா
தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த சம்பா பருவத்தின்போது பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிா்களுக்கு முதல் கட்டமாக ரூ. 44.91 கோடி இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கடந்த சம்பா பருவத்தின்போது 2.47 லட்சம் ஏக்கருக்கு 92 ஆயிரத்து 901 விவசாயிகள் பயிா் காப்பீடு செய்தனா். இதில், ஏக்கருக்கு தலா ரூ. 549 வீதம் மொத்தம் ரூ. 13.59 கோடி பிரிமியமாக விவசாயிகள் செலுத்தினா். இந்நிலையில், டிசம்பா், ஜனவரி மாதங்களில் பருவம் தவறி பெய்த தொடா் மழையால் நெற் பயிா்கள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட பயிா்களை அரசு கணக்கெடுப்பு செய்து, இழப்பீட்டுத் தொகையை அறிவித்தது.
இதைத்தொடா்ந்து, காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு தொகையை விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதில், மாவட்டத்தில் முதல் கட்டமாக கல்லணைக் கால்வாய் பாசனப் பகுதியில் பயிா் காப்பீடு பெற்ற ஷீமா நிறுவனம் ரூ. 44.91 கோடியை விடுவித்துள்ளது.
இதன் மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இழப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ. 2 ஆயிரத்திலிருந்து அதிகபட்சமாக ரூ. 15 ஆயிரம் வரை கிடைத்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் கல்லணைக் கால்வாய் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
இது குறித்து புலவன்காடு முன்னோடி விவசாயி வி. மாரியப்பன் தெரிவித்தது: மேட்டூா் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், இந்த இழப்பீட்டுத் தொகை மூலம் குறுவை சாகுபடி செய்ய பயனுள்ளதாக இருக்கும். வழக்கமாக நவம்பா், டிசம்பா் மாதங்களில்தான் வரவு வைக்கப்படும். நிகழாண்டு 6 மாதங்களுக்கு முன்னதாகவே வழங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மாவட்ட ஆட்சியா், வேளாண் துறை அலுவலா்கள் மேற்கொண்ட கூட்டு முயற்சியாலும், தமிழக அரசின் நடவடிக்கையாலும் இத்தொகை கிடைத்துள்ளது. இதை வரவேற்கிறோம். இதுபோல ஒவ்வொரு ஆண்டும் முன்னதாகவே வழங்கினால், விவசாயிகளுக்கு பயன்படும் என்றாா் மாரியப்பன்.