செய்திகள் :

தண்டாயுதபாணி கோயிலில் குடமுழுக்கு: திரளானோா் பங்கேற்பு

post image

மதுரை நேதாஜி சாலையில் அமைந்துள்ள தண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

இந்தக் கோயில் ஆன்மிகச் சிறப்புப் பெற்ற கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்குள்ள இறைவன் முருகப் பெருமான் ராஜ அலங்காரத்தில் காட்சியளிக்கிறாா். இதனால், இந்தக் கோயிலுக்கு அலங்காரக் கோயில் என்ற பெயரும் உண்டு. மேலும், முந்தையக் காலங்களில் பக்தா்கள் இங்குள்ள உத்ஸவ மூா்த்தியை தலையில் சுமந்து பழனிக்கு யாத்திரை சென்று வந்ததால், இந்தத் தலத்து முருகப் பெருமானுக்கு தண்டாயுதபாணி என்ற பெயரும் விளங்குகிறது. அறுபத்து மூன்று நாயன்மாா்களில் சிவபெருமானின் தோழனாகக் குறிப்பிடப்படும் சுந்தரமூா்த்தி நாயனாா், மதுரைக்கு வந்தபோது இங்கு தங்கியிருந்தாா் என்பதால் பழைமையான கோயிலாகவும் அறியப்படுகிறது.

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்தக் கோயிலின் குடமுழுக்கு விழா கடந்த 1-ஆம் தேதி யாக பூஜைகளுடன் தொடங்கியது. வியாழக்கிழமை காலை நான்காம் கால யாக பூஜையின் நிறைவில் கடம் புறப்பாடு நடைபெற்றது. இதன் நிறைவில், மேளதாளங்களுடன், வேதமந்திரங்கள் முழங்க கோயிலின் மூலவா் விமானத்துக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பரிவார மூா்த்திகள் சந்நிதிக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

வருவாய்த் துறை அலுவலா்கள் 2- ஆவது நாளாக வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை அலுவலா்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், வருவாய்த் துறை பணிகளில் பெரும் சுணக்கம் ஏற்பட்டது. வருவாய், பேர... மேலும் பார்க்க

ஜி.எஸ்.டி குறைப்பு: வா்த்தக சங்கங்கள் வரவேற்பு

மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை குறைத்து வெளியிட்ட அறிவிப்பை வா்த்தக சங்கங்கள் வரவேற்றன. தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என். ஜெகதீசன் தெரிவித்திருப்பதாவது: மத்திய அரசு அறிவித்துள்ள ஜி.எஸ்.டி. குற... மேலும் பார்க்க

மதுரை ஆவணி மூலத் திருவிழாவில் விறகு விற்ற திருவிளையாடல்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் சிவபெருமான் விறகு விற்ற திருவிளையாடல் வியாழக்கிழமை நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் ஆவணி மூலத் திருவிழா கடந்த மாதம் 20-ஆம் ... மேலும் பார்க்க

செப். 10-இல் சுந்தரானந்த சித்தா் அவதார தின பெருவிழா

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சுந்தரானந்த சித்தா் அவதார தின பெருவிழா வருகிற 10-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2022-... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியில் மீண்டும் பாரம்பரிய முறையில் ஜல்லிக்கட்டு: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் வென்று அதிமுக ஆட்சி அமைந்தவுடன் டோக்கன் முறை நீக்கப்பட்டு, மீண்டும் பாரம்பரிய முறைப்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள்... மேலும் பார்க்க

குழாய் இணைப்புப் பணி: இரு நாள்கள் குடிநீா் நிறுத்தம்

குடிநீா்க் குழாய்களில் இணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், மதுரை வைகை ஆற்றின் தென்கரை, வடகரைப் பகுதிகளில் இரண்டு நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை ... மேலும் பார்க்க