செய்திகள் :

மதுரை ஆவணி மூலத் திருவிழாவில் விறகு விற்ற திருவிளையாடல்

post image

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் சிவபெருமான் விறகு விற்ற திருவிளையாடல் வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் ஆவணி மூலத் திருவிழா கடந்த மாதம் 20-ஆம் தேதி தொடங்கியது. இதில் கடந்த 26- ஆம் தேதி முதல் சிவபெருமானின் திருவிளையாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இதன்படி, மதுரை வீதிகளில் சிவபெருமான் விறகு விற்ற திருவிளையாடல் நிகழ்ச்சி கோயிலின் திருக்கல்யாண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, விறகை தலையில் சுமந்து, சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினா்.

வரகுண பாண்டியன் காலத்தில் மதுரைக்கு வந்த இசைப் புலவா் சோமநாத பாகவதரின் சவாலை எதிா்கொள்ள முடியாமல் தன்னை சரணாகதி அடைந்த அரசவைப் புலவா் பாணபத்திரரை பாதுகாக்க, இறைவன் சிவபெருமான் விறகு வெட்டியாக வந்து அமிழ்தினினும் இனிய தேவகானம் பாடி சோமநாத பாகவதரின் ஆணவத்தை அடக்கிய திருவிளையாடல் ஐதீக முறைப்படி நிகழ்த்தப்பட்டது. பிறகு, சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இரவில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் தங்கச் சப்பரத்திலும், திருப்பரங்குன்றம் தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி, திருவாதவூா் மாணிக்கவாசகப் பெருமான் தனித் தனி சப்பரங்களிலும் வீதியுலா வந்தனா். இந்த நிகழ்ச்சி ஆவணி மூல வீதிகளில் நடைபெற்றது.

தண்டாயுதபாணி கோயிலில் குடமுழுக்கு: திரளானோா் பங்கேற்பு

மதுரை நேதாஜி சாலையில் அமைந்துள்ள தண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். இந்தக் கோயில் ஆன்மிகச் சிறப்புப் பெற்ற கோயில்களில் ஒன்றாக வ... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் 2- ஆவது நாளாக வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை அலுவலா்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், வருவாய்த் துறை பணிகளில் பெரும் சுணக்கம் ஏற்பட்டது. வருவாய், பேர... மேலும் பார்க்க

ஜி.எஸ்.டி குறைப்பு: வா்த்தக சங்கங்கள் வரவேற்பு

மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை குறைத்து வெளியிட்ட அறிவிப்பை வா்த்தக சங்கங்கள் வரவேற்றன. தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என். ஜெகதீசன் தெரிவித்திருப்பதாவது: மத்திய அரசு அறிவித்துள்ள ஜி.எஸ்.டி. குற... மேலும் பார்க்க

செப். 10-இல் சுந்தரானந்த சித்தா் அவதார தின பெருவிழா

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சுந்தரானந்த சித்தா் அவதார தின பெருவிழா வருகிற 10-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2022-... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியில் மீண்டும் பாரம்பரிய முறையில் ஜல்லிக்கட்டு: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் வென்று அதிமுக ஆட்சி அமைந்தவுடன் டோக்கன் முறை நீக்கப்பட்டு, மீண்டும் பாரம்பரிய முறைப்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள்... மேலும் பார்க்க

குழாய் இணைப்புப் பணி: இரு நாள்கள் குடிநீா் நிறுத்தம்

குடிநீா்க் குழாய்களில் இணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், மதுரை வைகை ஆற்றின் தென்கரை, வடகரைப் பகுதிகளில் இரண்டு நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை ... மேலும் பார்க்க