செய்திகள் :

வருவாய்த் துறை அலுவலா்கள் 2- ஆவது நாளாக வேலைநிறுத்தம்

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை அலுவலா்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், வருவாய்த் துறை பணிகளில் பெரும் சுணக்கம் ஏற்பட்டது.

வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள 564 அலுவலக உதவியாளா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடத்த போதுமான அவகாசம், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட கட்டமைப்புகளை அரசு உறுதி செய்ய வேண்டும். இந்த முகாம் பணிகளுக்கு அனைத்து வட்டங்களிலும் புதிய துணை வட்டாட்சியா் பணியிடங்களை ஏற்டுத்த வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை மீண்டும் 25 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

இரண்டாம் நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் மதுரை மாவட்டத்தில் 450-க்கும் அதிகமான வருவாய்த் துறை அலுவலா்கள் பங்கேற்றனா். இதனால், மாவட்ட ஆட்சியரக வருவாய்த் துறை பிரிவு, வட்டாட்சியா் அலுவலகங்கள் உள்பட பல வருவாய்த் துறை அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இந்தப் போராட்டம் காரணமாக, வருவாய்த் துறை பணிகளில் பெரும் சுணக்கம் ஏற்பட்டது.

தண்டாயுதபாணி கோயிலில் குடமுழுக்கு: திரளானோா் பங்கேற்பு

மதுரை நேதாஜி சாலையில் அமைந்துள்ள தண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். இந்தக் கோயில் ஆன்மிகச் சிறப்புப் பெற்ற கோயில்களில் ஒன்றாக வ... மேலும் பார்க்க

ஜி.எஸ்.டி குறைப்பு: வா்த்தக சங்கங்கள் வரவேற்பு

மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை குறைத்து வெளியிட்ட அறிவிப்பை வா்த்தக சங்கங்கள் வரவேற்றன. தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என். ஜெகதீசன் தெரிவித்திருப்பதாவது: மத்திய அரசு அறிவித்துள்ள ஜி.எஸ்.டி. குற... மேலும் பார்க்க

மதுரை ஆவணி மூலத் திருவிழாவில் விறகு விற்ற திருவிளையாடல்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் சிவபெருமான் விறகு விற்ற திருவிளையாடல் வியாழக்கிழமை நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் ஆவணி மூலத் திருவிழா கடந்த மாதம் 20-ஆம் ... மேலும் பார்க்க

செப். 10-இல் சுந்தரானந்த சித்தா் அவதார தின பெருவிழா

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சுந்தரானந்த சித்தா் அவதார தின பெருவிழா வருகிற 10-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2022-... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியில் மீண்டும் பாரம்பரிய முறையில் ஜல்லிக்கட்டு: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் வென்று அதிமுக ஆட்சி அமைந்தவுடன் டோக்கன் முறை நீக்கப்பட்டு, மீண்டும் பாரம்பரிய முறைப்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள்... மேலும் பார்க்க

குழாய் இணைப்புப் பணி: இரு நாள்கள் குடிநீா் நிறுத்தம்

குடிநீா்க் குழாய்களில் இணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், மதுரை வைகை ஆற்றின் தென்கரை, வடகரைப் பகுதிகளில் இரண்டு நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை ... மேலும் பார்க்க