தண்டாளம் மகாமாரியம்மன் கோயிலில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு
திருமருகல் ஒன்றியம், கட்டுமாவடி ஊராட்சி தண்டாளம் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, திங்கள்கிழமை காலை பால் குடம் எடுத்தல், அம்பாளுக்கு அபிஷேகம் தீபாராதனை, கஞ்சி வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4 மணிக்கு ரத காவடி புறப்பாடு, இரவு 7 மணிக்கு சந்தனக் காப்பு அலங்காரம், தீபாராதனைம் நடைபெற்றது.
நேற்று செவ்வாய்கிழமை மதியம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல கட்டுமாவடியில் அமைந்துள்ள வலம்புரி கற்பக விநாயகா், அக்னிவீரன், காத்தவராயன், பாம்புலி அம்மன் ஆலயத்திலும் வைகாசி பெருவிழா நடைபெற்றது.