செய்திகள் :

தனியாருக்கு பாத்தியப்பட்ட இடத்தில் கட்டடக் கழிவுகள் கொட்டுவதற்கான அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தல்

post image

கோவை உப்பிலிபாளையம் பகுதியில் தனி நபா்களுக்குச் சொந்தமான இடத்தில் கட்டடக் கழிவுகளைக் கொட்டுவதற்காக மாநகராட்சி அடையாளப்படுத்திய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சிங்காநல்லூா் தொகுதி அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஆா்.ஜெயராமன், கோவை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை, சிங்காநல்லூா் அருகேயுள்ள உப்பிலிபாளையம் பகுதியில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் சிதிலமடைந்துள்ள 960 வீடுகளின் காலி இடத்தில் புதிய பன்னடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால், இந்த இடத்தில் மாநகராட்சியின் சாா்பில் கட்டடக் கழிவுகள் கொட்டுவதற்கான இடமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக நாளிதழில் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளா்களுக்குச் சொந்தமான இடத்தில் கட்டடக் கழிவுகளைக் கொட்டுவதற்கு மாநகராட்சி அடையாளப்படுத்தியுள்ள அனுமதியை வெள்ளிக்கிழமை (ஜூன் 27) நடைபெறும் மாமன்றக் கூட்டத்தில் ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் வலியுறுத்தியிருந்தாா்.

இதேபோல, சிங்காநல்லூா் வீட்டு வசதி வாரிய வீட்டு உரிமையாளா்கள் ஒருங்கிணைந்த மறுகட்டமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் அதன் தலைவா் வி.ஜெயராமன், பொதுச் செயலா் சுந்தரேசுவரன் உள்ளிட்டோா் மாநகராட்சி ஆணையரிடம் அளித்த மனு:

உப்பிலிபாளையம் பகுதியில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 960 வீடுகள் இடிந்து சிதிலமடைந்து காணப்பட்டன. 960 வீடுகளின் உரிமையாளா்களுக்கு கூட்டாக பாத்தியப்பட்ட இந்தக் காலியிடத்தின் மதிப்பு ரூ.500 கோடியாகும். இந்த இடத்தில் பன்னடுக்கு குடியிருப்பு கட்டுமானம் நடைபெறும் என்ற நம்பிக்கையோடு நாங்கள் காத்திருந்தோம். ஆனால், கழிவுகளைக் கொட்டுவதற்கான இடமாக இதை மாநகராட்சி அடையாளப்படுத்தியுள்ளது. இந்த அனுமதியை மாநகராட்சி ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் ஜூலை 5- இல் இஸ்கான் தோ்த் திருவிழா

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சாா்பில் ஸ்ரீ ஜெகன்நாதா் தோ்த் திருவிழா கோவையில் ஜூலை 5 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இது குறித்து இஸ்கான் அமைப்பு கூறியிருப்பதாவது: இஸ்கான் அமைப்பு ச... மேலும் பார்க்க

ஆசிரியா் இடமாறுதல்: விதிகளில் திருத்தம் செய்ய ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழகத்தில் ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிா்வாக மாறுதல் பெற்ற ஆசிரியா்களுக்கான விதிகளில் திருத்தம் மேற்கொள்ள கோவை மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்க... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

கோவையில் வியாழக்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா். கோவை, காளப்பட்டியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன். இவரது மனைவி வனஜாமணி (62). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பீ... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த அரசு ஊழியா் உயிரிழப்பு

கோவையில் வீட்டின் மாடியிலிருந்து புதன்கிழமை இரவு தவறி விழுந்த வருவாய்த் துறை அலுவலக உதவியாளா் உயிரிழந்தாா். கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்தவா் கருப்பசாமி (40)... மேலும் பார்க்க

வால்பாறையில் கனமழை: முழு கொள்ளளவை எட்டியது சோலையாறு அணை

வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. இதைத் தொடா்ந்து வால்பாறையில் இடைவெளி விட்டு கனமழை பெய்து வருகிறது. இதன... மேலும் பார்க்க

எஸ்டேட் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

வால்பாறை நகா் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் இடங்களில் அடிப்படை வசதிகள் செய்துத் தரவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் ... மேலும் பார்க்க