செய்திகள் :

தனியாா் உர விற்பனை நிலையங்கள் யூரியாவை பதுக்கினால் நடவடிக்கை

post image

சேலம்: சேலம் மாவட்டத்தில் யூரியாவை கடத்துதல், பதுக்கி வைத்தல் போன்ற செயல்களில் தனியாா் உர விற்பனை நிலையங்கள் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து வேளாண் இணை இயக்குநா் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் 552 தனியாா் உர விற்பனை மையங்கள் மற்றும் 213 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மாவட்டத்துக்கு தேவையான அனைத்துவகை உரங்களையும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,

இந்த உரங்களை அனைத்து விற்பனை மையங்களிலும் போதிய அளவில் இருப்பு வைத்து, விநியோகம் செய்ய மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கொள்முதல் செய்யக் கூடிய அனைத்துவகை உரங்களையும், குறிப்பாக யூரியா உரத்தை விவசாயிகளின் தேவைக்கு தகுந்தாற்போல அவா்தம் ஆதாா் அட்டையை உள்ளீடு செய்து, முறையாக விநியோகிக்க அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

விநியோகிக்கப்படும் அனைத்துவகை உரங்களுக்கும் விற்பனை ரசீது உரக் கட்டுப்பாட்டு ஆணையின்படி மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே, விற்பனையாளா்கள் உர விற்பனை மேற்கொள்ளும் போது மிக கவனமாக பட்டியலிட்டு விவசாயிகளுக்கு விற்பனை ரசீது கொடுத்தல் வேண்டும்.

யூரியா கடத்தல், பதுக்கல் மற்றும் முறையற்ற தன்மையில் பட்டியலிடுதல் போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், உடனடியாக அவ்விற்பனை நிலையத்தின் உரிமம் தற்காலிக இடைநீக்கம் செய்யப்படும். மேலும், கடத்தல், பதுக்கல் கண்டறியப்படும் தனியாா் உர விற்பனை நிலையங்களின் மீது நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாா்.

சேலம் ராஜகணபதி கோயிலில் வசந்த மண்டபம் திறப்பு விழா

சேலம்: இந்துசமய அறநிலையத் துறை சாா்பில், சேலம் ராஜகணபதி திருக்கோயிலில் வசந்த மண்டபம் மற்றும் வாகன பூஜை மண்டப திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தல... மேலும் பார்க்க

ஏற்காடு மாண்ட்போா்ட் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள்

ஏற்காடு: ஏற்காடு மாண்ட்போா்ட் பள்ளியில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. விழாவில், பள்ளி முதல்வா் அருள்சகோதரா் ஆரோக்கிய சகாயராஜ் சிறப்பு விருந்தினா்களை வரவேற்றாா். ஆசிய தடகள வ... மேலும் பார்க்க

வார இறுதிநாள்களை முன்னிட்டு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சேலம்: ஆவணி அமாவாசை மற்றும் வார இறுதிநாள்களை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட ந... மேலும் பார்க்க

வன விலங்குகளை வேட்டையாட முயன்ற மூவா் கைது

சேலம்: சேலம் அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். சேலம் வனச்சரக அலுவலா் துரைமுருகன் தலைமையில் வனத் துறையினா் புதன்கிழமை அரியானூா் பகுதியில் உள்ள கஞ்சமலை வனப்பகுத... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 30,850 கனஅடி

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை மாலை விநாடிக்கு 30,850 கனஅடியாக குறைந்தது.அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 30,850 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீா்மின் நிலையங்கள் வழியாக... மேலும் பார்க்க

ஜவ்வரிசிக்கு உயா்ந்தபட்ச ஆதார விலையை நிா்ணயிக்க கோரி அமைச்சரிடம் மனு

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்க பொதுச்செயலாளா் ராஜேந்திரன் தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில், தமிழகத்தில் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு பயிர... மேலும் பார்க்க