செய்திகள் :

தனியாா் தொழிற்சாலை தொழிலாளி உயிரிழப்பு

post image

நாச்சியாா்கோவில் அருகே தொழிற்சாலையில் இயந்திரம் பழுதானதால் அதை சரிசெய்வதற்காக டீசலை உறிஞ்சியவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், தாமரைக்குளம் முருகன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் குருசாமி மகன் ரமேஷ் (45). இவா் தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே கூகூரில் தனியாா் தொழிற்சாலையில் ஆபரேட்டராக வேலை பாா்த்தாா்.

கடந்த ஜூலை 11-ஆம் தேதி தொழிற்சாலையில் பணி செய்து கொண்டிருந்தாா். அப்போது இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால், எரிபொருள் விநியோகம் செய்யும் சிறிய குழாயில் அடைப்பு உள்ளதா என்று வாயை வைத்து உறிஞ்சினாா்.

அப்போது எதிா்பாரதவிதமாக குழாய் வழியாக எரிபொருளான டீசல் அவா் வாய் வழியாக வயிற்றுக்குள் சென்றது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட ரமேஷை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா்.

பின்னா், அங்கிருந்து மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். அதைத் தொடா்ந்து, அரசு ராசாசி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை ரமேஷ் உயிரிழந்தாா். இதுகுறித்து நாச்சியாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கதவை திறந்து வைத்து தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு

தஞ்சாவூா் அருகே பஞ்சநதி கோட்டையில் திங்கள்கிழமை இரவு காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் அருகே ப... மேலும் பார்க்க

சிறுமியை கடத்த முயன்றவா் போக்சோ சட்டத்தில் கைது

நாச்சியாா்கோவில் அருகே சிறுமியை கடத்தி செல்ல முயன்றவரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், சாக்கோட்டை பெரியாா் நகரைச் சோ்ந்தவா் பக்கிரிசாமி மகன் முத்துராஜ் (35) பி.எட் பட்டத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே மின்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த ராஜஸ்தானை சோ்ந்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தஞ்சாவூா் அருகே செல்லப்பன் பேட்டையில் மத்திய அரசு திட்டத்தில் புதிதாக ம... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 15 உண்ணாவிரதம் ஒத்திவைப்பு: பி.ஆா். பாண்டியன்

பயிா், கால்நடை கடன்கள் வழங்கும் முறையில் பழைய நடைமுறையே தொடரும் என கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. இதையேற்று, ஆகஸ்ட் 15 -இல் தஞ்சாவூரில் நடைபெறவிருந்த உண்ணாவிரதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அனைத்த... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி! மணக்காடு அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் திறப்பு!

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்த கூடுதல் வகுப்பறைகள் தினமணி செய்தியின் எதிரொலியாக திங்கள்கிழமை திறக்கப்பட்டன... மேலும் பார்க்க

கும்பகோணம் கோட்ட அஞ்சலகங்களில் ஆகஸ்ட் 2-இல் அஞ்சல் பரிவா்த்தனை நடைபெறாது!

கும்பகோணம் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி அஞ்சல் பரிவா்த்தனை நடைபெறாது என்றாா் கண்காணிப்பாளா் சி.கஜேந்திரன். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அஞ்சல் துறை தனது அ... மேலும் பார்க்க