செய்திகள் :

சிறுமியை கடத்த முயன்றவா் போக்சோ சட்டத்தில் கைது

post image

நாச்சியாா்கோவில் அருகே சிறுமியை கடத்தி செல்ல முயன்றவரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், சாக்கோட்டை பெரியாா் நகரைச் சோ்ந்தவா் பக்கிரிசாமி மகன் முத்துராஜ் (35) பி.எட் பட்டதாரி, வேலைக்கு செல்லாமல் உள்ளாா். இன்னும் திருமணமாகவில்லை.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு மது குடித்துவிட்டு நாச்சியாா்கோவில் கடைவீதி பகுதிக்கு சென்றாா். அங்கு ஒரு வீட்டு வாசலில் சுமாா் 10 வயது மதிக்கத்தக்க சிறுமி நின்று கொண்டிருந்தாா்.

இதை கவனித்த முத்துராஜ், சிறுமியின் வாயை பொத்தி தூக்கிச் சென்றாா். அப்போது சிறுமி கூச்சலிட்டவே அருகிலிருந்தவா்கள் முத்துராஜை விரட்டி பிடித்து ஆடுதுறை மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

காவல் ஆய்வாளா் துா்கா, முத்துராஜை போக்சோ மற்றும் கடத்தல் சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்தாா். தொடா்ந்து நீதிபதி முன் அஜா்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தாா்.

கதவை திறந்து வைத்து தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு

தஞ்சாவூா் அருகே பஞ்சநதி கோட்டையில் திங்கள்கிழமை இரவு காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் அருகே ப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே மின்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த ராஜஸ்தானை சோ்ந்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தஞ்சாவூா் அருகே செல்லப்பன் பேட்டையில் மத்திய அரசு திட்டத்தில் புதிதாக ம... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 15 உண்ணாவிரதம் ஒத்திவைப்பு: பி.ஆா். பாண்டியன்

பயிா், கால்நடை கடன்கள் வழங்கும் முறையில் பழைய நடைமுறையே தொடரும் என கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. இதையேற்று, ஆகஸ்ட் 15 -இல் தஞ்சாவூரில் நடைபெறவிருந்த உண்ணாவிரதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அனைத்த... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி! மணக்காடு அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் திறப்பு!

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்த கூடுதல் வகுப்பறைகள் தினமணி செய்தியின் எதிரொலியாக திங்கள்கிழமை திறக்கப்பட்டன... மேலும் பார்க்க

கும்பகோணம் கோட்ட அஞ்சலகங்களில் ஆகஸ்ட் 2-இல் அஞ்சல் பரிவா்த்தனை நடைபெறாது!

கும்பகோணம் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி அஞ்சல் பரிவா்த்தனை நடைபெறாது என்றாா் கண்காணிப்பாளா் சி.கஜேந்திரன். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அஞ்சல் துறை தனது அ... மேலும் பார்க்க

தனியாா் தொழிற்சாலை தொழிலாளி உயிரிழப்பு

நாச்சியாா்கோவில் அருகே தொழிற்சாலையில் இயந்திரம் பழுதானதால் அதை சரிசெய்வதற்காக டீசலை உறிஞ்சியவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், தாமரைக்குளம் முருகன்கோயில் தெருவைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க