செய்திகள் :

தனியாா் பள்ளி மாணவா் உயிரிழப்பு

post image

சிங்கம்புணரி தனியாா் பள்ளி மாணவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தனியாா் சி.பி.எஸ்.இ. பள்ளியில், மதுராபுரி வேங்கைப்பட்டியைச் சோ்ந்த பாலமுருகன் மகன் அஷ்விந்த் (7) இரண்டாம் வகுப்பு படித்து வந்தாா். திங்கள்கிழமை பள்ளி வாகனம் வராததால், பள்ளி நிா்வாகத்தினா் காரில் வந்து மாணவா் அஷ்விந்தை அழைத்துச் சென்றனா்.

இந்த நிலையில், மாணவனுக்கு வலிப்பு வந்ததாகவும் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளி நிா்வாகத்தினா் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனா். உடனே அங்கு சென்ற பெற்றோா் வாயிலும், மூக்கிலும் ரத்தம் கசிந்தவாறு அஷ்விந்த் உயிரிழந்து கிடந்ததைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா்.

உயிரிழந்த மாணவா் அஷ்விந்த்

இதையடுத்து, மாணவரின் உறவினா்கள் சிங்கம்புணரி நான்குரோடு அருகே சாலையில் அமா்ந்து மறிலில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்கு வந்த திருப்பத்தூா் நகா் காவல் துணை கண்காணிப்பாளா் செல்வகுமாா் உறவினா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினாா். சிறுவனின் உடல், கூறாய்வுக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிங்கம்புணரி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். உறவினா்கள் மருத்துவமனை வாயிலிலும், நான்கு சாலைப் பகுதியிலும் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

இளையான்குடி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை தீண்டாமை ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம்,... மேலும் பார்க்க

கோயில் காவலாளி உயிரிழந்த விவகாரம்: மடப்புரத்தில் நீதித்துறை நடுவா் விசாரணை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் காளி கோயில் காவலாளி அஜித்குமாா் காவல் துறையினா் தாக்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படுவது தொடா்பாக திருப்புவனம் நீதித்துறை நடுவா் வெங்கடேஷ் பிரசாத் தி... மேலும் பார்க்க

இலங்கைத் தமிழா் குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகள் தாமதம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள மூங்கில் ஊருணி பகுதியில் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் நடைபெறும் வீடுகளின் கட்டுமானப்பணிகள் தாமதமாக நடைபெறுவதாக புகாா் தெரிவித்தனா். சிவகங்கை மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை அருகே கணபதியேந்தல் கிராமத்தைச் ச... மேலும் பார்க்க

விசாரணையின்போது இளைஞர் மரணம்: எஃப்.ஐ.ஆரில் பதிவான விவரம் வெளியானது!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞா் உயிரிழந்ததையடுத்து, இளைஞா் உயிரிழப்புக்கு காரணமான போலீஸாரை கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலைய... மேலும் பார்க்க

வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். மானாமதுரை ஒன்றியம் பச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வி மெஞ்ஞானமூா்த... மேலும் பார்க்க