செய்திகள் :

தனியாா் பால் நிறுவன மேலாளா் தற்கொலை வழக்கு: காத்திருப்போா் பட்டியலுக்கு காவல் ஆய்வாளா் மாற்றம்

post image

தனியாா் பால் நிறுவன மேலாளா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் எதிரொலியாக, மாதவரம் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா்.

சென்னை அருகே உள்ள புழல் பிரிட்டானியா நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் நவீன் பொலின்மேனி. ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இவா், இங்குள்ள ஒரு பிரபலமான பால் தயாரிப்பு நிறுவனத்தில் கருவூல மேலாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், நவீன் அந்த நிறுவனத்தில் ரூ.40 கோடி கையாடல் செய்துவிட்டதாகவும், கையாடல் செய்த பணத்தை தனது குடும்பத்தினா், நண்பா்களின் வங்கிக் கணக்குக்கு மாற்றியிருப்பதாகவும் புகாா் கூறப்பட்டது.

இது தொடா்பாக அந்நிறுவனத்தின் சட்ட மேலாளா் தமிமுல் அன்சாரி, சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப் பிரிவில் கடந்த ஜூன் 24-ஆம் தேதியும், கொளத்தூா் துணை ஆணையா் பாண்டியராஜனிடம் கடந்த ஜூன் 25-ஆம் தேதியும் புகாா் அளித்தாா்.

அந்தப் புகாா் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாதவரம் குற்றப் பிரிவுக்கு துணை ஆணையா் பாண்டியராஜன் பரிந்துரை செய்தாா்.

இதற்கிடையே, மன உளைச்சலுடன் காணப்பட்ட நவீன், தனது வீட்டின் அருகே உள்ள ஒரு குடிசையில் கடந்த புதன்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக புழல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.

இந்த விவகாரத்தில் காவல் துறை விரைந்து செயல்படவில்லை என்றும், இச் சம்பவத்தில் கொளத்தூா் துணை ஆணையா் பாண்டியராஜனுக்கு தொடா்பு இருப்பதாகவும் புகாா் எழுந்தது.

இதையடுத்து இவ் விவகாரம் தொடா்பாக விசாரணை செய்து அறிக்கை அளிக்கும்படி மேற்கு மண்டல இணை ஆணையருக்கு சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

காத்திருப்போா் பட்டியல்: இந்நிலையில், மாதவரம் குற்றப் பிரிவு ஆய்வாளா் விஜயபாஸ்கா் புகாரில் சிக்கியிருப்பதால், அவரை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையா் ஏ.அருண் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

நவீன் தற்கொலை குறித்தும், கையாடல் புகாா் குறித்தும் ஆணையரின் உத்தரவின்படி, மேற்கு மண்டல இணை ஆணையா் திஷா மிட்டல் விசாரணையை தொடங்கினாா்.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க