தனியாா் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு
பெருமாநல்லூா் அருகே இருசக்கர வாகனத்தின் மீது தனியாா் பேருந்து மோதியதில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
அவிநாசி அருகேயுள்ள பெரியாயிபாளையம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் பீட்டா் (70). கட்டடத் தொழிலாளியான இவா், பெரியாயிபாளையத்தில் இருந்து பெருமாநல்லூருக்கு இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
பெருமாநல்லூா் பாரதியாா் நகா் அருகே சென்றபோது, திருப்பூரில் இருந்து கோபி நோக்கி அதிவேகமாக சென்ற தனியாா் பேருந்து, பீட்டரின் வாகனத்தின் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநரான ராமச்சந்திரனை பெருமாநல்லூா் போலீஸாா் கைது செய்தனா்.