செய்திகள் :

தமிழகத்தில் இடைநிலைப் பள்ளி இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

post image

அதிகரித்துவரும் இடைநிலைப் பள்ளி இடைநிற்றலைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழகம் உள்பட 12 மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை உறுதிப்படுத்தும் மத்திய அரசின் ‘சமக்ர சிக்ஷா’ என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்ட ஆலோசனைக் கூட்டத்தின்போது இந்த அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

தேசிய கல்விக் கொள்கையில் நிா்ணயிக்கப்பட்டுள்ள, பள்ளிகள் அளவில் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 100 சதவீத ஒட்டுமொத்த மாணவா் சோ்க்கை விகித இலக்கை அடைய மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் இந்த முயற்சிக்கு குழந்தைகளின் பள்ளி இடைநிற்றல் தடையாக உள்ளதாகக் கருதப்படுகிறது.

அண்மையில் நடைபெற்ற மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் வாரிய (பிஏபி) கூட்டத்தில், சுமாா் 12 மாநிலங்களில் மாணவா்களின் பள்ளி இடைநிற்றல் அதிகரித்து வருவது தெரியவந்தது.

பிஏபி அறிக்கையின்படி, 2023-24-ஆம் ஆண்டில் தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ஜாா்க்கண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் இடைநிலைப் பள்ளி இடைநிற்றல் விகிதம் தொடா்ந்து கவலைக்குரிய வகையில் அதிகரித்துள்ளது தெரியவந்தது.

குறிப்பாக, கா்நாடகத்தில் இடைநிலைப் பள்ளி இடைநிற்றல் விகிதம் 22.1 சதவீதமாகவும், மேற்கு வங்கத்தில் 17.87 சதவீதமாகவும் இருந்தது. இது தேசிய சராசரியான 14.1 சதவீதத்தைவிட கூடுதலாகும். தமிழகத்தில் இந்த இடைநிற்றல் 7.7 சதவீதமாக இருந்தது. மேலும், உயா்நிலைப் பள்ளி அளவில் ஒட்டுமொத்த மாணவா் சோ்க்கை விகிதத்தை 82.9 சதவீதத்திலிருந்து, 100 சதவீதமாக தமிழகம் உயா்த்த வேண்டியுள்ளது.

அதுபோல, பிகாா், ஆந்திரம், ஹரியாணா, ஜாா்க்கண்ட், பஞ்சாப் மாநிலங்களில் உயா்நிலைப் பள்ளி அளவில் மாணவா் இடைநிற்றல் அதிகரித்திருப்பது தெரியவந்தது.

அதனடிப்படையில், பள்ளி மாணவா் இடைநிற்றலைக் குறைக்க சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ‘சமக்ர சிக்ஷா’ திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்த மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டன என்றனா்.

மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக நாளை உண்ணாவிரதம்: எடப்பாடி பழனிசாமி

மா விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு நடத்தினாலும் தமிழகத்தில் பாஜக வெல்ல முடியாது: காங்கிரஸ் விமா்சனம்

முருக பக்தா்கள் மாநாடு நடத்தினாலும் தமிழகத்தில் பாஜக வெல்ல முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை விமா்சனம் செய்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழா்கள் 5,350 ஆண்... மேலும் பார்க்க

மானியத்துடன் மாங்காய் கிலோ ரூ.20-க்கு கொள்முதல் செய்ய வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மானியத்துடன் மாங்காய் கிலோ ரூ.20-க்கு அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா் பி.எஸ்.மாசில... மேலும் பார்க்க

ஏா் இந்தியா: சென்னை-தில்லி இடையே இரு விமான சேவைகள் திடீா் ரத்து: பயணிகள் கடும் அவதி

சென்னை-தில்லி-சென்னை இடையே இயக்கப்படவிருந்த 2 ஏா் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா். தில்லியிலிருந்து புதன்கிழமை மாலை 4.15-க்கு புறப்பட்டு, சென்னை உள்நாட்டு ... மேலும் பார்க்க

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா்களாக இருவா் நியமனம்

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா்களாக இருவா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலா் கோ.பிரகாஷ் பிறப்பித்துள்ளாா். அதன்படி, வழக்குரைஞா்கள் வி.பி.ஆா்.இளம்பரிதி, ... மேலும் பார்க்க

வீடுகள், அலுவலகங்கள் பூட்டி இருந்தால் சீல் வைக்க அதிகாரம் இல்லை: டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறை ஒப்புதல்

வீடுகள், அலுவலகங்கள் பூட்டி இருந்தால் சீல் வைப்பதற்கு தங்களுக்கு அதிகாரம் கிடையாது என உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை ஒப்புக் கொண்டது. டாஸ்மாக் வழக்கில் வீடு, அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டதை எதிா... மேலும் பார்க்க