செய்திகள் :

தமிழகத்தில் இந்தி திணிக்கப்படவில்லை: தமிழிசை சௌந்தரராஜன்

post image

தமிழகத்தில் இந்தி திணிக்கப்படவில்லை என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழ்நாட்டில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஏழை, எளிய அரசுப் பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்கள் மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் இந்தி மொழி திணிக்கப்படவில்லை. ஒருவேளை இந்தி மொழி திணிக்கப்பட்டால் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நேற்றைய தினம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து, திமுக எம்பி கனிமொழி தவறாக பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ரூ.30 லட்சத்திற்கு ஏலம் போன டிவிட்டர் இலச்சினை!

ஒரு தமிழர் மத்திய அரசின் நிதி அமைச்சராக செயல்படுவதே மிகப்பெரிய பெருமை. தமிழ் மொழிக்காக நாங்களும்தான் போராடினோம். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உழைப்பால் உயர்ந்தவர். குடும்ப அரசியலில் ஆட்சிக்கு வந்து துணை முதல்வராக ஆனவர் அல்ல.

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. திமுக கூட்டணி கட்சியில் இருக்கக்கூடிய கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தது உண்மையே ஆகும். பாஜக ஒரு பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்றால் அதற்கு நீதிமன்றம் வரை சென்றுதான் அனுமதி வாங்க வேண்டிய சூழ்நிலை தமிழ்நாட்டில் உள்ளது என்றார்.

பிஏபி வாய்க்காலில் குளித்த கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலி!

சூலூர்: சுல்தான்பேட்டை அருகே பிஏபி வாய்க்காலில் குளித்த கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சூலூர் சுல்தான்பேட்டை அருகே தாசன் நாயக்கன்பாளையம் வழியாக பிஏப... மேலும் பார்க்க

இபிஎஸ் திடீர் தில்லி பயணம்!

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக தில்லி புறப்பட்டார்.தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்ற... மேலும் பார்க்க

தங்கம் விலை தொடர்ந்து குறைவு! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ. 65,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் தங்கம் விலை கடந்த மாா்ச் 20-ஆம் தேதி 66,480-க்கு விற்பனையாகி புதிய உச்சத்... மேலும் பார்க்க

அறநிலையத் துறையைச் சுரண்டிக் கொண்டிருப்பவர்கள் சிறைக்குச் செல்வது உறுதி: அண்ணாமலை!

இந்து சமய அறநிலையத் துறையைச் சுரண்டிக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொருவரும், சிறைக்குச் செல்வது உறுதி என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருப்... மேலும் பார்க்க

149 பாசன அமைப்புகள் ரூ.722 கோடியில் மறுசீரமைப்பு: நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: கட்டுமானம் செய்யும் பணிகள் ரூ.722 கோடியில் மேற்கொள்ளப்படும் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவித்தாா். சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நீா்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்... மேலும் பார்க்க

இஸ்லாமியா்களின் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தும் காவல் அரண் திமுக: முதல்வா் மு.க.ஸ்டாலின்

சென்னை: இஸ்லாமியா்களின் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தும் காவல் அரணாக திமுக எப்போதும் திகழும் என்று கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடக் கூறினாா். திமுக சிறுபான்மையினா் நல உரிமைப் பிரிவ... மேலும் பார்க்க