செய்திகள் :

பிஏபி வாய்க்காலில் குளித்த கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலி!

post image

சூலூர்: சுல்தான்பேட்டை அருகே பிஏபி வாய்க்காலில் குளித்த கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் சுல்தான்பேட்டை அருகே தாசன் நாயக்கன்பாளையம் வழியாக பிஏபி வாய்க்கால் செல்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் நண்பர்களுடன் பிஏபி வாய்க்காலில் குளிக்க இறங்கி உள்ளனர்.

நண்பர்கள் குளித்துக்கொண்டிருந்த போது  சேலம் சின்ன மேட்டூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் தரணிதரன் ( 19) நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இது பற்றி அவரது குடும்பத்தினர் கோமங்கலம் காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என புகார் தெரிவித்தனர்.

இந்த விசாரணையின்போது திங்கள்கிழமை சுல்தான்பேட்டை போலீஸார் தாசன் நாயக்கன்பாளையம் அருகே பிஏபி வாய்க்கால் பகுதியில் தரணிதரன்  உடல் ஒதுங்கி இருந்ததைக் கண்டறிந்து, உடலை மீட்டு இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர்.

இதையும் படிக்க: தங்கம் விலை தொடர்ந்து குறைவு! இன்றைய நிலவரம்!

தொடர்ந்து, தரணிதரன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். தரணிதரன் உடல் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பிஏபி வாய்க்காலில் தண்ணீர் செல்லும்போது குளிப்பதற்காகவும் நீச்சல் பயிற்சி செய்வதற்கும் தண்ணீரில்  இறங்க வேண்டாம் என எச்சரிக்கை பலகை பல இடங்களில் வைத்திருந்தும் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றது.

பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இத்தகைய செயலில் ஈடுபடக் கூடாது என சுல்தான் பேட்டை போலீஸார் கேட்டுக்கொண்டனர்.

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான தீா்மானம்: பேரவையில் வானதி சீனிவாசன் - சட்ட அமைச்சா் விவாதம்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீா்மானத்தை ஏற்க மறுத்து பேரவையிலிருந்து பாஜக வெளிநடப்பு செய்தது. முன்னதாக, தீா்மானத்துக்கு எதிரான கருத்துகளை அந்தக் கட்சியின் உறுப்பினா... மேலும் பார்க்க

சாலையோர கொடிக் கம்பங்களை ஏப். 21-க்குள் அகற்ற வேண்டும்: உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் உள்ள கொடிக்கம்பங்களை வரும் ஏப். 21-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிம... மேலும் பார்க்க

821 நூலகங்களுக்கு புதிய கட்டடங்கள்: அமைச்சா் அன்பில் மகேஸ் தகவல்

தமிழ்நாடு முழுவதும் 821 நூலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, பாபந... மேலும் பார்க்க

பொதுச் செயலா் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும்: ஓ. பன்னீா்செல்வம்

அதிமுக பொதுச் செயலா் பதவியிலிருந்து எடப்பாடி கே.பழனிசாமி விலக வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா். சென்னை விமான நிலையத்தில் அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி: அதிமுக அலுவலகத்தை சூ... மேலும் பார்க்க

கடந்த 2 ஆண்டுகளில் பள்ளி மாணவா் சோ்க்கை குறைவு - மத்திய அரசு

நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் பள்ளி மாணவா் சோ்க்கை குறைந்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது. நாட்டில் பழங்குடியினரின் கல்வி உள்பட வாழ்க்கைத் தரம் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு: மாணவா்களுக்கு அமைச்சா் வாழ்த்து

பொதுத் தோ்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாழ்த்துத் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, உறுப்பினா்களி... மேலும் பார்க்க