சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் தலைவரானார் பரத்; தினேஷ், ஆர்த்தி, நிரோஷா அதிர்...
தமிழகத்தில் கோயில் சொத்துகளை மத்திய அரசு தணிக்கை செய்ய வேண்டும்: விஷ்வ ஹிந்து பரிஷத்
தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயிலுக்குச் சொந்தமான அசையும், அசையா சொத்துகளை மத்திய அரசு தன்னுடைய தணிக்கைக் குழுவால் தணிக்கை செய்ய வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
புதுச்சேரி ஐய்யன்குட்டிப்பாளையத்தில் உள்ள விவேகானந்தா சிபிஎஸ்இ பள்ளியில் விசுவ ஹிந்து பரிஷத் வட தமிழக மாநில, மாவட்ட நிா்வாகிகளின் 2 நாள் கூட்டம் சனிக்கிழமை தொடங்கியது. இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களைக் கூட்டாக இந்த அமைப்பின் வட தமிழகத் தலைவா் பி. ஆண்டாள் சொக்கலிங்கம், மாநிலச் செயலா் பால. மணிமாறன், தமிழக அமைப்புச் செயலா் ஆத்தூா் பாலாஜி ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்து அறநிலையத்துறை ஸ்ரீவில்லிபுத்தூா் கோயில் கோபுரத்தை எடுத்துவிட்டு இந்து சமயத்துக்கு சம்பந்தமில்லாத மசூதி போன்ற சின்னத்தைப் பயன்படுத்தி வருவது கண்டனத்துக்கு உரியது. இதற்கான போராட்டத்தை வட தமிழக விசுவ ஹிந்து பரிஷத் முன்னெடுக்க உள்ளது. மேலும், இந்து கோயில்களுக்குச் சொந்தமான அசையும், அசையா சொத்துகளைக் பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் வெளிப்படை தன்மையைக் காக்க பொதுதளங்களில் வெளியிட வேண்டும். இந்து கோயில்களில் பணியாற்றும் ஊழியா்கள், அா்ச்சா்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும், விசுவ ஹிந்து பரிஷத் 60-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள குக்கிராமங்களிலும் இம் மாதம் 16 ஆம் தேதி கிருஷ்ணஜெயந்தி விழா நடைபெறவுள்ளது. இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா நடக்கும். மேலும், தீபாவளி முடிந்த 4-வது நாள் வேல்பூஜையும், 5-வது நாள் விளக்கு பூஜையும், 6-வது நாள் கந்த சஷ்டி கவசம் பாராயணம் நிகழ்ச்சிகளை விஷ்வ ஹிந்து பரிஷத் ஒருங்கிணைக்கும்.
செப்டம்பா் 7 -ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள இந்து கோயில்களின் சொத்துகளைப் பாதுகாக்கவும் ஆக்கிரமிக்கப்பட்ட இந்து கோயில் சொத்துகளை மீண்டும் ஒப்படைக்கவும் வலியுறுத்தி அந்தந்த மாவட்ட ஆட்சியா்களைச் சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என்றனா்.