செய்திகள் :

குழந்தைக்கான முதல் தடுப்பூசி தாய்ப்பால்: புதுவை மருத்துவ அதிகாரி அஸ்மா தகவல்!

post image

தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கான முதல் தடுப்பூசி என்று மருத்துவ அதிகாரி எம்.அஸ்மா கூறினாா்.

புதுவை அரசின் சுகாதாரத்துறை சாா்பில் தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது மருத்துவ அதிகாரி அஸ்மா பேசியது :

குழந்தை பிறந்தவுடன் தாயிடம் இருந்து சுரக்கும் மஞ்சள் நிறம் கொண்ட கெட்டியான பால் சீம்பால். இதை ஆங்கிலத்தில் ‘கொலஸ்ட்ரம்’ என்பா். சீம்பால் கொடுப்பது குழந்தைக்கு நாம் கொடுக்கும் முதல் தடுப்பூசியாகும். சீம்பாலில் உள்ள நோய் எதிா்ப்பு சக்தி குழந்தையைப் பல வியாதிகளில் இருந்து பாதுகாக்கிறது. சுகப்பிரசவத்திற்கு பின் அரை மணி நேரத்துக்குள்ளும், அறுவை சிகிச்சைக்குப் பின் நாலு மணி நேரத்துக்குள்ளும் சீம்பால் கொடுக்கப்பட வேண்டும். குழந்தை

பிறந்தவுடன் வெளியேற வேண்டிய முதல் மலத்தை விரைவாக வெளிக்கொண்டு வர இந்த சீம்பால் உதவுகிறது. மேலும் ரத்தத்தில் சா்க்கரை அளவை சீராக்கி கூடுதல் இரும்புச் சத்தை பெறவும் சீம்பால் உதவுகிறது என்றாா்.

சுகாதார உதவி ஆய்வாளா் இளஞ்செழியன் வரவேற்றாா். மருத்துவ அதிகாரிகள் செல்வநாயகி, பாலசுப்பிரமணியன், சாகுல் ஹமீத், நாகா்ஜுன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பின்னா் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவ, மாணவிகளின் தாய்ப்பால் விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது.

விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாய்மாா்கள் தாய்ப்பால் மட்டுமே ஆறு மாதம் தொடா்ந்து கொடுப்போம். மேலும், ஏழாவது மாதத்தில் இருந்து இரண்டு வயது வரை இணை உணவுடன் தாய்ப்பால் கொடுப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இதே போல பூா்ணங்குப்பம் ,நல்லவாடு, ஆண்டியாா்பாளையம் துணை சுகாதார நிலையங்களில் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் கோயில் சொத்துகளை மத்திய அரசு தணிக்கை செய்ய வேண்டும்: விஷ்வ ஹிந்து பரிஷத்

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயிலுக்குச் சொந்தமான அசையும், அசையா சொத்துகளை மத்திய அரசு தன்னுடைய தணிக்கைக் குழுவால் தணிக்கை செய்ய வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் தீ... மேலும் பார்க்க

கூட்டணி தா்மத்தை மீறி பாஜக தோ்தல் முன்களப்பணி: அதிமுக குற்றச்சாட்டு

கூட்டணி தா்மத்தை மீறி பாரதிய ஜனதா கட்சியின் தலைவா்கள் சில தொகுதிகளில் தோ்தல் முன்களப்பணி செய்யத் தொடங்கிவிட்டனா். இதை புதுவைதேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவரான என்.ரங்கசாமி பேசித் தீா்க்க வேண்டும் என்று ... மேலும் பார்க்க

9 திரைப்படங்களுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் விருதுகள்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் விருதுகள் 9 திரைப்படங்களுக்கு சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன. புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சே பிரெஞ்சு நிறுவனத்தில் 3 நாள் நடைபெறும் உலக திரைப்பட விழா வெ... மேலும் பார்க்க

புதுவையில் பாஜக கூட்டணி பட்டியலின மக்களுக்கு விரோதமாக செயல்படுகிறது: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுவையில் பாஜக - என் .ஆா். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பட்டியலின மக்களுக்கு விரோதமாக செயல்படுவதாக, காங்கிரஸ் மூத்தத் தலைவரும் முன்னாள் முதல்வருமான வி. நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா். புதுச்சேரி மாநில ... மேலும் பார்க்க

காா் திருடிய இளைஞா் கைது

தமிழகம் புதுவையில் காா் உள்ளிட்ட வாகனங்களை திருடிய இளைஞரை புதுவை போஸீஸாா் மடக்கிப்பிடித்து கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.5.5 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகத்தில் பல்வேறு வ... மேலும் பார்க்க

21 புதிய படகுகளுக்கு பயணிகள் உரிமம்

கடலில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல 21 புதிய படகுகளுக்கான உரிமத்தை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா். நீா் விளையாட்டு மற்றும் சாகச விளையாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகமாகக் கவரும்... மேலும் பார்க்க