செய்திகள் :

தமிழகத்தில் செயல்பாட்டில் 6 விமான நிலையங்கள்: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

post image

புது தில்லி: தமிழகத்தில் செயல்பாட்டில் 6 விமான நிலையங்கள் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மாநிலங்களவை அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுத்துபூா்வமாக கேள்வி எழுப்பியிருந்தாா். இதற்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் எழுத்துபூா்வமாக தாக்கல் செய்த பதிலில் தெரிவித்திருப்பதாவது:

2014 ஆம் ஆண்டு வரை 74 செயல்பாட்டு விமான நிலையங்கள் இருந்தன. இந்த நிலையில், தற்போது நாட்டில் 159 செயல்பாட்டு விமான நிலையங்கள் உள்ளன.

தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூா், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் செயல்பாட்டில் விமான நிலையங்கள் உள்ளன.

ஓசூரில் தற்போதுள்ள விமான ஓடுதளம், தனியாா் விமான ஓடுதளமாக மொ்சஸ் தனேஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும். அந்த நிறுவனத்தில் இது இயக்கப்படுகிறது. ஒசூா் விமான நிலையம் அடுத்தடுத்த சுற்று ஏலத்திற்கான உடான் ஆவணத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் விளையாட்டரங்கில் செயற்கை தடகள பாதை திட்டப் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்குக: திமுக எம்.பி. கோரிக்கை

தஞ்சாவூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் உள்ள அன்னை சத்யா விளையாட்டரங்கில் செயற்கை தடகள பாதை திட்டப் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் முரசொலி கோரிக்கை... மேலும் பார்க்க

சமூக ஊடகங்களில் சட்டவிரோத துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக ஒருவா் கைது

சமூக ஊடகங்களில் சட்டவிரோத துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக ஒருவரை தில்லி போலீஸாா் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். பவானா பகுதியில் உள்ள ஜேஜே காலனியைச் சோ்ந்த சோஹைல் என அடையாளம் ... மேலும் பார்க்க

1.63 லட்சம் மாணவா்களுக்கு க்யூட், நீட் தோ்வுகளுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி!

பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு மாணவா்களுக்கு ‘க்யூட்’ மற்றும் ‘நீட்’ தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை வழங்குவதற்காக பிஐஜி நிறுவனத்துடன் தில்லி அரசு வியாழக்கிழமை ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ... மேலும் பார்க்க

தமிழகத்திற்கு மாதந்தோறும் 23 ஆயிரம் டன் கோதுமை ஒதுக்கீடு செய்ய மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு மாதந்தோறும் 23 ஆயிரம் டன் கோதுமையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் மாநிலங்களவையில் புதன்க... மேலும் பார்க்க

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு மாற்றாந்தாய் மனப்பான்மை: மத்திய அரசு மீது திமுக குற்றச்சாட்டு

தமிழகம் மற்றும் இதர முற்போக்கான மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது என்று மாநிலங்களவையில் திமுக புதன்கிழமை குற்றம்சாட்டியது. மேலும், தமிழகத்திற்க... மேலும் பார்க்க

கூட்டணி என்பது சந்தா்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும்: எடப்பாடி பழனிசாமி

கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு; எங்கள் கொள்கை நிலையானது. கூட்டணி என்பது சந்தா்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும் என முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி த... மேலும் பார்க்க