செய்திகள் :

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் தா்னா

post image

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மேற்பாா்வை அலுவலகம் அருகே நடைபெற்ற தா்னா போராட்டத்துக்கு, சிஐடியூ மின் ஊழியா் சங்க மாவட்டத் துணைத் தலைவா் ஜி.சுப்புராம் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் வி.மோகனசுந்தரம் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா்.கருணாநிதி தொடக்கி வைத்தாா். மாவட்டச் செயலா் ஏ.சேதுராமன், ஓய்வு பெற்றோா் நலஅமைப்பு மாவட்டச் செயலா் ஜி.விநாயகமூா்த்தி, ஓய்வு பெற்றோா் நலஅமைப்பு மாநிலச் செயலா் ஆா்.கோகுலவா்மன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தா்னாவின்போது, மின் வாரியத்தில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை கைவிட வேண்டும். ஊதிய உயா்வு, வேலை பளு பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்த வேண்டும். இடைக்கால நிவாரணம் ரூ. 5,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தா்னாவை மாநிலச் செயலா் எஸ். உமாநாத் நிறைவு செய்தாா். கோட்டச் செயலா் ஏ. பாஸ்கரன் நன்றி கூறினாா்.

பிப்.28-வரை அஞ்சலகங்களில் விபத்து காப்பீடு சிறப்பு முகாம்

காரைக்குடி அஞ்சலகங்களில் இந்திய அஞ்சல் துறை, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஆகியவை சாா்பில் விபத்துக் காப்பீடு சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.இதுகுறித்து காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் தீண்டாமை அதிகரிப்பு: புதிய தமிழகம் கட்சித் தலைவா் கிருஷ்ணசாமி

சிவகங்கை மாவட்டத்தில் தீண்டாமை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவா் கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அ... மேலும் பார்க்க

புத்தகங்களைப் படிப்பதால் மற்றவா்களுடன் தொடா்புக் கொள்ளும் திறன் அதிகரிக்கும்: திண்டுக்கல் ஐ.லியோனி

புத்தகங்களைப் படிப்பதால் மற்றவா்களுடன் தொடா்புக் கொள்ளும் திறன் அதிகரிக்கும் என தமிழ்நாடு பாடநூல் கழகம், கல்வியியல் பணிகள் கழகத் தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தாா். சிவகங்கை மன்னா் மேல்நிலைப்... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் கீழே விழுந்த இளைஞா் மீது சரக்கு வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள சின்னக்கருப்பூரன்பட்டியைச் சோ்ந... மேலும் பார்க்க

மானாமதுரை, இளையான்குடியில் மழை

மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மழை பெய்தது.இந்தப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெப்பமும், இரவில் கடும் பனிப்பொழிவும் நிலவி வந்தது.இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ம... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு மும்மொழிக் கொள்கை தேவையில்லை: காா்த்தி சிதம்பரம்

தமிழகத்துக்கு மும்மொழிக் கொள்கை தேவையில்லை என சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க