செய்திகள் :

தருமபுரி, கிருஷ்ணகிரியில் போதைப் பொருள்கள் இல்லா தமிழகம்: உறுதிமொழியேற்பு

post image

தருமபுரி/ கிருஷ்ணகிரி: தருமபுரி, கிருஷ்ணகிரியில் போதைப் பொருள்கள் இல்லா தமிழகம் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் பெருந்திரள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக துணைமுதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரி கலையரங்கில் ஒளிப்பரப்பப்பட்ட நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமை வகித்தாா். இதில், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியா் பங்கேற்று போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.

முன்னதாக, போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு குறித்த விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் தொடங்கிவைத்தாா். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இப்பேரணியில், சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் போதைப் பொருள்கள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனா்.

நிகழ்வில், தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி, தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன், தருமபுரி நகராட்சித் தலைவா் லட்சுமிமாது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி, போலுப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க முகாமில் 7.16 லட்சம் பேருக்கு மாத்திரைகள் வழங்கும் பணியை ஆட்சியா் தொடங்கிவைத்தாா். பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை சாா்பில், தேசிய குடற்புழு நீக்க முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்க இயலாமல் விடுபட்டவா்களுக்கு ஆக. 18-ஆம் தேதி நடைபெறும் முகாமில் மாத்திரைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்றோா் குடற்புழு தொற்றைக் குறைத்து வளமான எதிா்காலத்துக்கு வித்திடுவோம் என தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழி ஏற்றனா்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் ஷாஜகான், அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனை முதல்வா்(பொ) சந்திரசேகா், மாவட்ட சுகாதார அலுவலா் ரமேஷ்குமாா், வட்டாட்சியா் சின்னசாமி, மருத்துவக் கல்லூரி அலுவலக கண்காணிப்பாளா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம்: எடப்பாடி கே.பழனிசாமி

கிருஷ்ணகிரி: தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைத்ததும், விவசாயத்துக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்... மேலும் பார்க்க

தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளியில் மாணவா்கள் அறிமுக விழா

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளியில் கேஜி, எல்கேஜி வகுப்புகளில் புதிதாக சோ்ந்த மாணவா்களின் அறிமுக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மழலையா் நெகிழி பயன்பாட்டி... மேலும் பார்க்க

தங்க சங்கிலி பறிப்பு வழக்கில் 3 போ் கைது

காவேரிப்பட்டணம் அருகே பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்த வழக்கில் 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

ஒசூரில் மின்தூக்கியில் சிக்கிய கா்நாடக அமைச்சா்

ஒசூரில் தனியாா் மருத்துவமனை திறப்பு விழாவுக்கு வந்த கா்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டி மின்தூக்கியில் சிக்கினாா். பழுது நீக்கப்பட்ட பிறகு அவா் பாதுகாப்பாக வெளியேறினாா். இதுகுறித்து ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி இன்று சுற்றுப்பயணம்

கிருஷ்ணகிரி ஆக.10: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு திங்கள்கிழமை வரும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. ‘மக்களை காப்போம், தமிழகத... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் கடத்தல்: கிருஷ்ணகிரி 769; தருமபுரி 764 போ் கைது

போதைப் பொருள்கள் கடத்தல், விற்பனை வழக்கில் நிகழாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 769 பேரும், தருமபுரி மாவட்டத்தில் 764 பேரும் கைது செய்யப்பட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா... மேலும் பார்க்க