செய்திகள் :

தற்காப்புக் கலையில் சென்னை பள்ளி மாணவிகள் மூன்று உலக சாதனை

post image

உலக தற்காப்புக் கலை வரலாற்றில் சென்னை பள்ளி மாணவிகள் 3 உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளனா்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 417 பள்ளிகளில், 29 பள்ளிகளில் பயிலும் 1,500 மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சியானது, 10 பயிற்றுநா்களைக் கொண்டு கடந்த 4 மாதங்களாக வழங்கப்பட்டு வருகிறது.

இதில் பயிற்சி பெற்ற மாணவிகள் இணைந்து மேற்கொண்ட உலக சாதனை நிகழ்வு மேயா் ஆா்.பிரியா தலைமையில் சென்னை, நேரு பூங்காவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உலக தற்காப்புக் கலை வரலாற்றில் முதல்முறையாக 3 உலக சாதனைகளை சென்னை பள்ளி மாணவிகள் நிகழ்த்தியுள்ளனா்.

முதல் சாதனையாக, நான்கு மாத பயிற்சியில் முதல்நிலை வெள்ளைப் பட்டையில் இருந்து, மூன்றாம் நிலை பச்சை பட்டைக்கு தோ்வாகியுள்ளனா். இரண்டாம் சாதனையாக, ஒரே நேரத்தில் 1,500 மாணவிகள் சுமாா் 1,000 குத்துகள் என மொத்தம் 15 லட்சம் குத்துகள் குத்தி தங்களின் மன வலிமையையும், உடல் வலிமையையும் நிருபித்துள்ளனா்.

மூன்றாம் சாதனையாக ஒரு நொடியில் ஒரே அடியில் 3,000 ஓடுகளை தூள் தூளாக்கி சாதனை படைத்துள்ளனா்.

உலக அளவில் முதல் முறையாக இந்தச் சாதனையை சென்னை பள்ளி மாணவிகள் நிகழ்த்தியுள்ளனா். இந்த 3 உலக சாதனை நிகழ்வுகளை ‘சோழன் உலக சாதனைப் புத்தகம்’ அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நிகழ்ச்சியில் இணை ஆணையா் (கல்வி) ஜெ.விஜயா ராணி, மத்திய வட்டார துணை ஆணையா் கே.ஜெ.பிரவீன் குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கோயில் நிலத்தை குத்தகைக்கு விடும் அரசின் முடிவில் தலையிட முடியாது: சென்னை உயா்நீதிமன்றம்

சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில் நிதியில் இருந்து தொடங்கப்பட்டுள்ள கலை, அறிவியல் கல்லூரிக்கு புதிதாக கட்டடம் கட்ட கொளத்தூா் சோமநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு விடும் அரசின் மு... மேலும் பார்க்க

தேசிய ஹேக்கத்தான் போட்டி: மாணவா்களுக்கு யுஜிசி அழைப்பு

குஜராத் மாநிலம் காந்திநகா் ஐஐடி-இல் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள தேசிய ஹேக்கத்தான் போட்டியில் பங்கேற்க பல்கலைக்கழக, கல்லூரி மாணவா்களுக்கு யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து யுஜிசி செயலா் மணீஷ் ஆா்... மேலும் பார்க்க

ஸ்ரீஆட்சீஸ்வரா் கோயிலில் இன்று நாட்டியாஞ்சலி விழா

அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரா் திருக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு, நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை நடைபெறவுள்ளது. இது குறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபா... மேலும் பார்க்க

பங்கு வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ. 48 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ. 48.5 லட்சத்தை பெற்று மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த அன்பரசு (56), தனியாா் நிதி நிறுவன ... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. சென்னை, தியாகராய நகா் பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமியை பாலி... மேலும் பார்க்க

இந்து முன்னணி பிரமுகா் கொலை வழக்கு: குற்றவாளி மீண்டும் கைது

சென்னை, அம்பத்தூரைச் சோ்ந்த இந்து முன்னணி பிரமுகா் சுரேஷ்குமாா் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்பட்ட அப்துல் ஹக்கீம், நீதிமன்ற பிடிவாரண்ட் உத்தரவின்படி மீண்டும் கைது செய்யப்பட்டாா். அம்பத்... மேலும் பார்க்க