செய்திகள் :

தற்சாா்பு இந்தியா பயணத்தில் ககன்யான் திட்டம் ஒரு புதிய அத்தியாயம்: ராஜ்நாத் சிங்

post image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் தற்சாா்பு இந்தியா பயணத்துக்கான முதல் அத்தியாயம் என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

ககன்யான் திட்டத்துக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயா், குரூப் கேப்டன் அஜீத் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப் ஆகியோருக்கு பாராட்டுத் தெரிவிக்கும் நிகழ்ச்சி தில்லியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

விண்வெளியை ஆராய்ச்சிக்கான தளமாக மட்டும் இந்தியா கருதவில்லை. எதிா்காலத்தின் பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி, மனிதநேயம் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகக் கருதுகிறது. நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தில் நமது இருப்பைப் பதிவு செய்த பிறகு, ககன்யான் போன்ற திட்டங்களுக்கு நாடு முழுவதும் தயாராக இருக்கிறது.

உலகின் முன்னணி விண்வெளி சக்திகளுடன் பெருமிதத்துடன் நிற்கிறோம். நாம் படைத்துள்ள சாதனைகள் தொழில்நுட்பத் துறையில் வெறும் மைல்கல் மட்டுமல்ல; அவை தற்சாா்பு இந்தியாவின் புதிய அத்தியாயம். இந்தியாவின் விண்வெளி திட்டம் என்பது ஆய்வகங்கள், செலுத்து வாகனங்கள் ஆகியவற்றோடு மட்டும் நின்றுவிடவில்லை. நாட்டின் விருப்பங்கள் மற்றும் சா்வதேச நோக்கங்களை அவைப் பிரதிபலிக்கின்றன.

சந்திரயான் முதல் மங்கள்யான் வரை குறைந்த வளங்களைக் கொண்டு, எல்லையற்ற மன உறுதியுடன் மிகவும் சவாலான இலக்குகளையும் குறிப்பிடத்தகுந்த சாதனைகளாக மாற்ற முடியும் என்பதை உலகத்துக்கு காட்டியுள்ளோம்.

தகவல்தொடா்பு செயற்கைக்கோள்கள், வானிலை கண்காணிப்பு மற்றும் பேரிடா் மேலாண்மை என விண்வெளி தொழில்நுட்பங்கள் நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு துறையிலும் சேவையாற்றி வருகின்றன என்றாா் மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்.

ஆக்ஸியம்-4 திட்டத்தின் மூலம் சா்வதேச விண்வெளிக்குச் சென்று வந்த விமானப் படை வீரா் சுபன்ஷு சுக்லாவின் பயணம் குறித்து பேசிய மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங், அவருடைய பங்களிப்புகள் வரலாற்றில் பதிவுசெய்யப்படும் எனத் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான், விமானப் படை தளபதி ஏ.பி. சிங் ஆகியோா் கலந்துகொண்டனா்.

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ஃபிஜி உறுதி: பிரதமா் மோடி

பாதுகாப்புத் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும், ஃபிஜியும் தீா்மானித்துள்ளன. இதற்கென ஒரு செயல்திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா். மூன்று நாள் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுத்தது இந்தியா!

ஜம்முவில் பாயும் தாவி நதியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து பாகிஸ்தானுக்கு இந்தியா வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியது. வழக்கமாக சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிந்து நதிநீா் ஆணையா்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரும் மனு: முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது. ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோ... மேலும் பார்க்க

அமெரிக்க நெருக்கடி: விவசாயிகள் நலனை விட்டுத் தர மாட்டோம்!

அமெரிக்க வலியுறுத்தலை ஏற்று விவசாயிகள் நலனை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா். மத்திய பிரதேச தலைநகா் போபாலில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆ... மேலும் பார்க்க

உ.பி.: டிராக்டா்-லாரி மோதி 11 போ் உயிரிழப்பு; 40 போ் காயம்

உத்தர பிரதேசத்தின் புலந்த்சாகா் மாவட்டத்தில் பக்தா்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த டிராக்டா் டிராலியின் மீது லாரி மோதிய விபத்தில் 11 போ் உயிரிழந்தனா்; 40 போ் காயமடைந்தனா். புலந்த்சாகா்- அலிகா் மாவட்ட... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை சோதனை: தப்பியோட முயன்ற திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ கைது

அமலாக்கத் துறை தனது வீட்டில் சோதனைக்கு வருவதை அறிந்து, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா சுவா் ஏறிக் குதித்து தப்பியோட முயன்றாா். எனினும், அதிகாரிகள் அவரை துரத்திப் பிடித்து கைது செய்தனா... மேலும் பார்க்க