செய்திகள் :

தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு! எம்எல்ஏ விடுதியில் அமலாக்கத்துறை சோதனை!

post image

சென்னை: பணமோசடி வழக்கில், அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடைத்தி வரும் நிலையில், அவரது மகன், மகள் வீடுகள் மற்றும் சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் அரசு பங்களாவிலும், சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியில் உள்ள, ஐ பெரியசாமியின் மகனும் பழனி தொகுதி எம்எல்ஏவுமான செந்தில் குமார் அறையிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்திவருகிறார்கள்.

திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் உள்ள அமைச்சர் பெரியசாமியின் மகள் இந்திராவின் வீட்டிலும் அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் சிலப்பாடியில் உள்ள பழனி சட்டமன்ற உறுப்பினரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி. செந்தில்குமார் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

திமுக அமைச்சர் வீட்டிலும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதலே தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், தலைமைச் செயலகத்துக்கு தீவிர பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்துக்கு வருவோர் சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தலைமைச் செயலகம் பகுதியில் எம்எல்ஏ விடுதியிலும் சோதனை நடைபெற்று வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக அமைச்சர் ஐ. பெரியசாமி வீட்டில் சோதனை நடைபெற்று வருவதை அறிந்து அங்கே திரண்ட அவரது ஆதரவாளர்கள், வாசலில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் வெவ்வேறு மாவட்டங்களிலும் சோதனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. பண மோசடி வழக்கில், ஏற்கனவே அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தியிருந்த நிலையில், இன்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

எம்எல்ஏ விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது புகார்

சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் அத்துமீறி அமலாக்கத்துறையினர் உள்ளே நுழைந்ததால், வெளிநபர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்ததாக திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருக... மேலும் பார்க்க

ஆடிக் கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!

சென்னை: ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ம... மேலும் பார்க்க

எந்த பயமுறுத்தலும் எங்களை அச்சுறுத்த முடியாது! - ரெய்டு குறித்து கனிமொழி

எந்த பயமுறுத்தலும் எங்களுடைய கட்சித் தோழர்களையும் தலைவர்களையும் அச்சுறுத்த முடியாது என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார். சட்டவிரோத பணமோசடி தொடர்பாக, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.... மேலும் பார்க்க

இல.கணேசன் உடலுக்கு மு.க. ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி அஞ்சலி

மறைந்த பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசனின் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.தமிழகத்தைச் சேர்ந்தவ... மேலும் பார்க்க

தலைமைச் செயலகத்தில் ஐ. பெரியசாமி அறைக்கு பூட்டு! சென்னை வீட்டில் அறைகளின் பூட்டு உடைப்பு?

பணமோசடி வழக்கில், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வரும் நிலையில், தலைமைச் செயலகத்தில் ஐ. பெரியசாமி அறையின் கதவை தலைமைச் செயலக அதி... மேலும் பார்க்க

சுற்றுலாத் துறை வருவாய் அதிகரிப்பு! தமிழக அரசு பெருமிதம்!

தமிழக சுற்றுலாத் துறையில் வருவாய் அதிகரித்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.2024ஆம் ஆண்டில், உலகளவில் ஏறத்தாழ 140 கோடி சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 11 சதவிகிதம் அதிக... மேலும் பார்க்க