செய்திகள் :

தாய் மரணம்.. 4 வயது மகள் வரைந்த ஓவியத்தைப் பார்த்து அதிர்ந்த போலீஸ்

post image

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்ஸி மாவட்டம் கோட்வாலி பகுதியில், 27 வயது பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவத்தில், அவரது மகள் வரைந்த ஓவியம், காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அப்பெண் தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தாயை, தந்தை அடித்துத் துன்புறுத்துவது போலவும், அவரைக் கொலை செய்வது போலவும் மகள் வரைந்த ஓவியத்தைப் பார்த்த, பெண்ணின் பெற்றோர், அந்த ஓவியத்தை காவல்துறையினரிடம் அளித்துள்ளனர்.

உடனடியாக சிறுமியிடம் காவல்துறையினர் விசாரித்ததில், அப்பாதான், அம்மாவை அடித்துக் கொன்றார், நீ செத்துவிடு என்று கூறினார், அம்மா அசைவற்றுக் கிடந்தார். பிறகு, அம்மா உடலை அப்பா தொங்க விட்டார் என்று காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

ஏன் இதனை முன்பே சொல்லவில்லை என்று காவல்துறையினர் கேட்டதற்கு, தன்னையும் அப்பா கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாக சிறுமி கூறியிருக்கிறார்.

இதையடுத்து, கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணின் உடல் கூறாய்வு அறிக்கைக்காக காவல்துறையினர் காத்திருக்கிறார்கள்.

இது பற்றி பெண்ணின் தந்தை கூறுகையில், 2019ஆம் ஆண்டு முதலே வரதட்சிணை கேட்டு மகளை துன்புறுத்தி வந்ததாகவும், திருமணத்தின்போது ரூ.20 லட்சம் கொடுத்தும் கூட, கார் கேட்டு துன்புறுத்திய நிலையில்தான் மகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கங்குலி கார் விபத்து: நூலிழையில் உயிர்தப்பினார்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி சென்ற கார் வியாழக்கிழமை விபத்தில் சிக்கியது.வேகமாக சென்ற லாரியின் மீது கார் மோதிய விபத்தில், பெரிய காயங்களின்றி கங்குலி உயிர்தப்பினார்.இதையும்... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் மிகைப்படுத்தப்பட்டவை-வங்கதேச எல்லைப் படை தலைமை இயக்குநா்

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதான தாக்குதல் குறித்த தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று அந்நாட்டின் எல்லைப் படை தலைமை இயக்குநா் முகமது அஷ்ரஃபுஸமான் சித்திகி தெரிவித்தாா். மேலும், சிறுபா... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: நேபாள பக்தா்கள் 50 லட்சம் போ் புனித நீராடல்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நேபாளத்தில் இருந்து இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா். உலக அளவில் மிகப் ... மேலும் பார்க்க

வரும் பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் போட்டி: பாஜக கூட்டணி உறுதி

பிகாா், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்து நடைபெறவுள்ள பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் வலுவாக போட்டியிடவுள்ளதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) தலைவா்கள் உறுதிபூண்டனா். தில்... மேலும் பார்க்க

பலமுறை வெளியேற்றப்பட்ட பாஜக எம்எல்ஏ விஜேந்தா் குப்தா தில்லி பேரவைத் தலைவராக வாய்ப்பு!

ஆம் ஆத்மி கட்சியின் கடந்த 10 ஆண்டு ஆட்சியின்போது, தில்லி பேரவையிலிருந்து பலமுறை வெளியேற்றப்பட்ட முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா (61), தற்போது அவா் தில்லி சட்டப்பேவரையின் புதிய தலைவராக ... மேலும் பார்க்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 78. சோனியா காந்திக்கு வியாழக்கிழமை(பிப். 20) காலை உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் உடனடியாக சர்... மேலும் பார்க்க