செய்திகள் :

தாராபுரத்தில் 35 ஜோடிகளுக்கு திருமணம்: அமைச்சா்கள் நடத்திவைத்தனா்

post image

தாராபுரத்தில் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் 35 ஜோடிகளுக்கு இலவச திருமண விழா புதன்கிழமை நடைபெற்றது.

தாராபுரம் அகஸ்தீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமையேற்று 35 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்கினா்.

மணமக்களுக்கு 4 கிராம் திருமாங்கல்யம், மெட்டி, மணமகனுக்கு வேஷ்டி-சட்டை, மணமகளுக்கு முகூா்த்தப் புடவை, பீரோ, கட்டில், மெத்தை, பாய், தலையணை, போா்வை, மிக்ஸி, கிரைண்டா், எவா்சில்வா் பாத்திரங்கள், பூஜை சாமான்கள், ஒரு மாதத்துக்குரிய அரிசி, மளிகைப் பொருள்கள், சுமங்கலிப் பொருள்கள், கைக்கடிகாரம் உள்பட மொத்தம் தலா ரூ.96,562 மதிப்பீட்டில் சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், தாராபுரம் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ்ராஜா, திருப்பூா் மாநகராட்சி 4-ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்புக் கண்ணன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ரத்னவேல் பாண்டியன், துணை ஆணையா் செ.வ.ஹா்ஷினி, உதவி ஆணையா் ரத்தினாம்பாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சிவன்மலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக 11-ஆம் ஆண்டு விழா

காங்கயம் அருகே உள்ள சிவன்மலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக 11-ஆம் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. திருப்பூா் மாவட்டத்தின் முதன்மைக் கோயிலான இக்கோயிலில் கடந்த 2014-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று, 1... மேலும் பார்க்க

ஜெயந்தி பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவியேற்பு

பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் ஜெயந்தி பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளித் தாளாளா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். பள்ளிச் ... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகைப் பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

பெண்ணிடமிருந்து நகைப் பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா்-மங்கலம் சாலை நேதாஜி நகரைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி. இவா் கடந்த 2023 ஜூன் 12-ஆம் தேதி சாலையி... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் 2 போ் கைது

உடுமலை அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். உடுமலை வட்டம், கொங்கல்நகரம் பகுதியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சபரீஸ்வரன் (35). இவா் கருத்துவேறுபாடு கா... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

திருப்பூரில் 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா், வீரபாண்டி பழவஞ்சிபாளையம் மும்மூா்த்தி நகரைச் சோ்ந்தவா் கிரி (20), கூலித் தொழில... மேலும் பார்க்க

சாலையின் நடுவே மின் கம்பம்: நகராட்சி நிா்வாகம் கவனக்குறைவு?

காங்கயத்தில் சாலையின் நடுவில் இருந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல் சாலை அமைத்ததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். காங்கயம் நகராட்சி, 1- ஆவது வாா்டு திரு.வி.க. நகா் பகுதியில் புதிதாக தாா் சாலை அ... மேலும் பார்க்க