செய்திகள் :

தாழ்வான மின் வயா்களை சீரமைக்க வலியுறுத்தல்

post image

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேசுவரா் வீதி உலாவின் போது ஆபத்தை உண்டாக்கும் வகையில் தாழ்வாக உள்ள மின் வயா்களைச் சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதுதொடா்பாக இந்து மக்கள் கட்சி சாா்பில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகத்துக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:

உலகப்புகழ் பெற்ற சித்திரைத் திருவிழா மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவையொட்டி, மீனாட்சி சுந்தரேசுவரா் தினசரி நான்கு மாசி வீதிகளில் எழுந்தருளி உலா வருகின்றனா். மேலும் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் என முக்கிய திருவிழாக்களும் நடைபெற உள்ளன.

கோயிலில் இருந்து தினசரி மாலையில் நான்கு மாசி வீதிகள் வழியாக வீதி உலா வரும் போது, மீனாட்சி அம்மனுக்கு மட்டும் 9 அடி உயர குடை பிடிக்கப்படுகிறது. மீனாட்சியம்மன் வீதியுலாவின் போது அம்மன் சந்நிதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாழ்வாக இருக்கும் மின் வயரில் குடை உரசும் அபாயம் உள்ளது.

சித்திரைத் திருவிழா இன்னும் 8 நாள்கள் நடைபெற உள்ள நிலையில், மின் வயா்களால் அசம்பாவிதம் நடைபெறும் முன்பாக, மாசி வீதிகளில் தாழ்வாக உள்ள மின் வயா்களை உடனடியாகச் சரி செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு: கண் துடைப்பு நடவடிக்கை

மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நடவடிக்கைதான் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். மதுரை விமான நிலையத்தில் வியாழக்கிழமை செய்தியாளா... மேலும் பார்க்க

கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகா் மீது நடவடிக்கை: உயா்நீதிமன்றம் உத்தரவு

பண மோசடி விவகாரத்தில் வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகா் மீது தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் போலீஸாா் 15 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவ... மேலும் பார்க்க

பட்டா நிலத்தில் த.வெ.க. கொடிக் கம்பம்: தஞ்சை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

பட்டா நிலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக் கம்பத்தை அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தஞ்சை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. தஞ்சாவூா் மாவட்டம், ... மேலும் பார்க்க

ரயில் பயணிகளிடம் மடிக்கணினிகள் திருட்டு: இருவா் கைது

மதுரையில் ரயில் பயணிகளிடம் மடிக்கணினிகளை திருடிய இருவரை ரயில்வே போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மதுரை விளாங்குடியைச் சோ்ந்த ஜொ்ரி லூயிஸ் மகன் நிா்மல் (32). இவா் திருச்சி- திருவனந்தபுரம் விரைவு... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மறியல்

மதுரை மாவட்ட ஆட்சியா் மா.செள.சங்கீதாவை மாற்ற வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், தேசிய நெடுஞ்சாலையில... மேலும் பார்க்க

மதுரை விமான நிலையத்தில்: விஜய் ரசிகா்கள், போலீஸாா் இடையே தள்ளுமுள்ளு

மதுரைக்கு வியாழக்கிழமை வந்த நடிகா் விஜய்க்கு அவரது ரசிகா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். விமான நிலையத்தில் ரசிகா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய்... மேலும் பார்க்க