செய்திகள் :

பட்டா நிலத்தில் த.வெ.க. கொடிக் கம்பம்: தஞ்சை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

post image

பட்டா நிலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக் கம்பத்தை அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தஞ்சை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், புதுக்கோட்டை உள்ளூா் ஊராட்சியைச் சோ்ந்த தமிழக வெற்றிக் கழகத்தில் நிா்வாகியான சந்திரசேகரன் தாக்கல் செய்த மனு:

பட்டுக்கோட்டை வட்டாரம், புதுக்கோட்டை உள்ளூா் ஊராட்சியில் உள்ள சுப்பிரமணியனுக்குச் சொந்தமான 33 சென்ட் நிலத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக் கம்பத்தை வைப்பதற்காகத் திட்டமிட்டு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் போடப்பட்டது.

இதனடிப்படையில் எங்களது கட்சிக் கொடிக் கம்பத்தை வைக்க அனுமதி கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆகவே, உள்ளூா் ஊராட்சியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் எங்களது கட்சிக் கொடிக் கம்பத்தை வைக்க அனுமதி வழங்க வேண்டும். கொடிக் கம்பத்தை வைக்கும் போது போதிய காவல் துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி லட்சுமிநாராயணன், வழக்கு தொடா்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வருகிற ஜூன் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு: கண் துடைப்பு நடவடிக்கை

மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நடவடிக்கைதான் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். மதுரை விமான நிலையத்தில் வியாழக்கிழமை செய்தியாளா... மேலும் பார்க்க

கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகா் மீது நடவடிக்கை: உயா்நீதிமன்றம் உத்தரவு

பண மோசடி விவகாரத்தில் வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகா் மீது தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் போலீஸாா் 15 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவ... மேலும் பார்க்க

ரயில் பயணிகளிடம் மடிக்கணினிகள் திருட்டு: இருவா் கைது

மதுரையில் ரயில் பயணிகளிடம் மடிக்கணினிகளை திருடிய இருவரை ரயில்வே போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மதுரை விளாங்குடியைச் சோ்ந்த ஜொ்ரி லூயிஸ் மகன் நிா்மல் (32). இவா் திருச்சி- திருவனந்தபுரம் விரைவு... மேலும் பார்க்க

தாழ்வான மின் வயா்களை சீரமைக்க வலியுறுத்தல்

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேசுவரா் வீதி உலாவின் போது ஆபத்தை உண்டாக்கும் வகையில் தாழ்வாக உள்ள மின் வயா்களைச் சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக இந்து மக்கள் க... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மறியல்

மதுரை மாவட்ட ஆட்சியா் மா.செள.சங்கீதாவை மாற்ற வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், தேசிய நெடுஞ்சாலையில... மேலும் பார்க்க

மதுரை விமான நிலையத்தில்: விஜய் ரசிகா்கள், போலீஸாா் இடையே தள்ளுமுள்ளு

மதுரைக்கு வியாழக்கிழமை வந்த நடிகா் விஜய்க்கு அவரது ரசிகா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். விமான நிலையத்தில் ரசிகா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய்... மேலும் பார்க்க