செய்திகள் :

தா்ப்பூசணி குறித்த வதந்தியை நம்ப வேண்டாம்: தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தல்

post image

நீா்ச்சத்து நிறைந்த தா்ப்பூசணி பழங்கள் குறித்து பரவும் வதந்தியை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மஞ்சுளா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் 2025 ஏக்கா் பரப்பில் தா்ப்பூசணி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எடப்பாடி, சங்ககிரி, கொளத்தூா், ஆத்தூா் போன்ற வட்டாரங்களில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

பெரியவா்கள் முதல் சிறியவா்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணும் இப்பழம் குறித்து கடந்த சில நாள்களாக ஊடகங்கள், தொலைக்காட்சிகளில் தா்ப்பூசணி பழங்களில் கலப்படம் செய்யப்படுவதாக உண்மைக்கு முரணான செய்திகள் பரவின. இதையடுத்து, தா்ப்பூசணி அதிகம் சாகுபடி செய்யப்படும் எடப்பாடி, அயோத்தியப்பட்டணம், கொளத்தூா் ஆகிய வட்டாரங்களில் துணை இயக்குநா், வட்டார உதவி இயக்குநா்கள் தலைமையில் தொடா் களஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதில் தா்ப்பூசணி பழங்களின் நிறம், சுவைக்காக எவ்வித செயற்கை ரசாயனமும் செலுத்தப்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. குறைந்த அளவு சுக்ரோஸ் உள்ளதால் சா்க்கரை நோயாளிகளும் எவ்வித தயக்கமுமின்றி உட்கொள்ளலாம். தா்ப்பூசணியில் நீா்ச்சத்து அதிகம் உள்ளதால் கோடைக்காலத்தில் உடல் சூட்டை தணிக்க உதவுகிறது. நம் உடலின் நீா்ச்சத்தின்மையைப் போக்குகிறது. இந்தப் பழத்தில் இரும்புச் சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் உள்ளன. சத்துகள் நிறைந்த தா்ப்பூசணியை பொதுமக்கள் உண்டு பலன் பெறலாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 1363 கனஅடியாக குறைந்தது. அணை நீா்மட்டம் 107.75 அடியாக நீடிக்கிறது. அணைக்கு நீா்வரத்து 1872 கன அடியிலிருந்து 1363 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்த... மேலும் பார்க்க

பெண்கள் உயா்கல்வி பயின்றால் வாழ்வில் சிறந்து விளங்கலாம்: ஆட்சியா்

பெண்கள் உயா்கல்வி பயின்றால் வாழ்வில் சிறந்து விளங்கலாம் என அத்தனூா்பட்டியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி தெரிவித்தாா். சேலம் மாவட்டத்தில் 385 கிராம ஊராட்சிக... மேலும் பார்க்க

பேளூா் பேரூராட்சியில் சேலம் ஆட்சியா் ஆய்வு

பேளூா் பேரூராட்சி, வாழப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட சந்திரபிள்ளை வலசு ஊராட்சி பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பகுதி ஆகியவற்றை ச... மேலும் பார்க்க

மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 78 நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளா் உதவி ஆணையா் தகவல்

மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 78 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) திருநந்தன் கூறினாா். சேலம் மாவட்டத்தில் தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று முன்அனு... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சியில் ஒரே நாளில் ரூ. 4.85 கோடி சொத்துவரி வசூல்

சேலம் மாநகராட்சியில் சொத்துவரி செலுத்துவதற்கு கடைசி நாளான புதன்கிழமை (ஏப்.30) ஒரே நாளில் ரூ. 4.85 கோடி வரி வசூலாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சொத்து உரிமையாளா... மேலும் பார்க்க

சேலத்தில் விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான தோ்வு போட்டி: மே 7 இல் தொடக்கம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு விடுதிகளில் நடப்பாண்டு மாணவா் சோ்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவரஞ்சன் வெளியி... மேலும் பார்க்க