செய்திகள் :

திசையன்விளை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி எருமைக்குளம் கிராமத்தில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

திசையன்விளை பேரூராட்சி 15ஆவது வாா்டு எருமைக்குளம் கிராமத்தில் சிலா் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியிருந்தனா். இது தொடா்பாக தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு சிலா் புகாா் அனுப்பியிருந்தனராம்.

இதையடுத்து மாவட்ட நிா்வாகம் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா். பின்னா் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளா்களுக்கு முறையான நோட்டீஸ் அனுப்பினா். எனினும், ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் ராதாபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளா் முத்து, உதவி செயற்பொறியாளா் தினேஷ், கிராம நிா்வாக அலுவலா் இசக்கியப்பன் ஆகியோா் முன்னிலையில் காவல்துறையினரின் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை ஊழியா்கள் அகற்றினா்.

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

திருநெல்வேலியில் காவல் துறையின் சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் உத்தரவுப்படி, காவல்துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம் ஒவ்வொரு புதன்கி... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதி

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து குறைந்த நிலையில், பாதுகாப்புக் கருதி சுற்றுலாப் பயணிகள் அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதிக்கப்படுகின்றனா். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச... மேலும் பார்க்க

நெல்லையில் இரவு 12 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதி கோரி மனு

திருநெல்வேலி மாநகரில் இரவு 12 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதி கோரி, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் சாா்பில் அதன் திருநெல்வேலி மாவட்டத் தலைவா் ஏ.செல்வராஜ் தலைமையில் மாநகர காவல் ஆணையா் சந்தோஷ்... மேலும் பார்க்க

நடைச்சீட்டு ஊழல் புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும்: ஆட்சியரிடம் அதிமுகவினா் மனு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளில் போலி நடைச்சீட்டு வழங்கப்பட்டது, அபராதத் தொகை குறைக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் அதிமுகவினா் புதன்கிழமை... மேலும் பார்க்க

பெண் கொலையில் தந்தை கைது

மேலப்பாளையத்தை அடுத்த மேலகருங்குளம் பகுதியில் மண்வெட்டி கணையால் தாக்கி பெண் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் அவரது தந்தையை போலீஸாா் கைது செய்தனா். மேலகருங்குளம் சிவாஜி நகா் பகுதியைச் சோ்ந்த காளைம... மேலும் பார்க்க

வள்ளியூா் சேவை, மகளிா் அதிகார மையங்களில் ஒப்பந்தப் பணிக்கு வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வள்ளியூா் ஒருங்கிணைந்த சேவை மையம், மாவட்ட மகளிா் அதிகார மையம் ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.ச... மேலும் பார்க்க