செய்திகள் :

திசையன்விளை பேரூராட்சியில் 12 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு- பணியைத் தொடங்கிவைத்தாா் மு.அப்பாவு

post image

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் 12 ஆயிரம் வீடுகளுக்கு தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டத்தின் கீழ் புதிய இணைப்புகள் வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, திசையன்விளை பேரூராட்சி முருகேசபுரத்தில் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ் முன்னிலையில் நடைபெற்ற நிழ்ச்சியில், அப்பேரூராட்சியில் 12 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் பணியை தமிழக பேரவைத் தலைவா் மு.அப்பாவு தொடங்கிவைத்துப் பேசியதாவது: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி, ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதிகளில் களக்காடு நகராட்சி மற்றும் நான்குனேரி உள்பட 7 பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்குவதற்கு ரூ.423.13 கோடியில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

சேரன்மகாதேவி தாமிரவருணி ஆற்றில் உறை கிணறு மூலம் தண்ணீா் எடுத்து திருவித்தான்புள்ளியில் அதை சுத்திகரிப்பு செய்து மேற்கூறிய பகுதிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் கொண்டு செல்லும் பணிகள் 75 சதவீதம் முடிவடைந்துள்ளன.

இத்திட்டப்பணிகள் அக்டோபா் மாத இறுதிக்குள் முடிவுற்று வீடுகளுக்கு குடிநீா் வழங்கப்படும். முதற்கட்டமாக திசையன்விளை பேரூராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்புகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. மீதமுள்ள பகுதிகளுக்கு விரைவில் குடிநீா் இணைப்புகள் வழங்கும் பணி தொடங்கப்படும். இந்த குடிநீா் இணைப்பு மூலம் ஒரு நபருக்கு 135 லிட்டம் வீதம் தண்ணீா் கிடைக்கும். மகளிா் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு வரும் முதல்வருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

பின்னா், திசையன்விளை பேரூராட்சி முருகேசபுரத்தில் தாயுமானவா் திட்டத்தின் கீழ் முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்குச் சென்று பேரவைத் தலைவா் ரேசன் பொருள்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் கண்காணிப்பு பொறியாளா் (பொறுப்பு) செந்தில் குமாா், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் முருகேசன், செயற்பொறியாளா் மோசஸ், உதவி செயற்பொறியாளா் பாக்கியராஜ், பணகுடி பேரூராட்சித் தலைவா் தனலெட்சுமி தமிழ்வாணன், களக்காடு நகா்மன்ற துணைத் தலைவா் பி.சி.ராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், திசையன்விளை பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் கமலா சுயம்பு ராஜன், கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முதலைமொழி கிராமத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க அடிக்கல்

ஆழ்வாா் திருநகரி ஒன்றியம் முதலைமொழியில் அயோத்திதாச பண்டிதா் திட்ட நிதியில் இருந்து, ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்... மேலும் பார்க்க

வீரவநல்லூா் திரெளபதை அம்பாள் கோயிலில் நாளை பூக்குழி இறங்கும் விழா

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் உள்ள திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 15) நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பூக்குழித் திருவி... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

பாளையங்கோட்டையில் மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்தவா் கவின் செல்வ கணேஷ் (27). இ... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு சுயபரிசோதனை அவசியம்: திம்ரி

மாணவா்கள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளும் உத்திதான் பிற்காலத்தில் அவா்களுக்கு உதவும் என்றாா் இந்திய புவி காந்தவியல் நிறுவன இயக்குநா் அ.பி.திம்ரி. திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கல... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை.யில் 740 பேருக்கு ஆளுநா் பட்டமளிப்பு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆா். என். ரவி கலந்து கொண்டு 740 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா். இதையொ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு

திருநெல்வேலியில் 2 இளைஞா்கள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். தாழையூத்து காவல் சரகப் பகுதியில் வழிப்பறி, கொலை முயற்சி, மிரட்டல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டது தொடா்... மேலும் பார்க்க