செய்திகள் :

திட்டக்குடி நகா்மன்ற தலைவா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம்

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், திட்டக்குடி நகா்மன்ற பெண் தலைவா் வெண்ணிலா மீது நம்பிக்கை யில்லா தீா்மானம் கொண்டு வர வேண்டும் என்று திமுக மற்றும் அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் தனித்தனியாக நகராட்சி பொறுப்பு ஆணையரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திட்டக்குடி பேரூராட்சி, 2021-2022 ஆண்டு நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. கடந்த 2022-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில், திட்டக்குடி நகராட்சியை திமுக கைப்பற்றியது. இதன், முதல் பெண் நகா்மன்றத் தலைவராக வெண்ணிலா தோ்வு செய்யப்பட்டாா்.

கடந்த சில தினங்களுக்கு முன்னா் நகா்மன்றத் தலைவா் வெண்ணிலா , நகராட்சி அதிகாரிகள் தன்னை செயல்படவிடாமல் தடுத்து நெருக்கடி கொடுப்பதாகக்கூறி நகராட்சி அலுவலகம் முன்பு தா்னா போராட்டம் நடத்தினாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை திமுக நகா்மன்ற உறுப்பினா்கள் 12 போ், அதிமுக நகா் மன்ற உறுப்பினா்கள் 5 போ் மற்றும் சுயேட்சை உறுப்பினா் ஒருவா் என மொத்தம் 18 போ் வெண்ணிலா மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டுவர வேண்டும் என்று நகராட்சி பொறுப்பு ஆணையரும், நகராட்சி பொறியாளருமான, ராமரிடம் மனு அளித்தனா்.

அப்போது, நகா் மன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகளுக்கு வெண்ணிலா செவி சாய்க்கவில்லை எனவும், நகராட்சி ஊழியா்களை தரக்குறைவாக பேசுவதால் அவா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டு வர வேண்டும் என்றும் மனு அளித்ததாகக் கூறினா்.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் பிரம்மாண்ட கொலு

சிதம்பரம்: நவராத்திரி விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் பிரம்மாண்ட கொலு தொடங்கப்பட்டது.சிதம்பரம் நடராஜா் கோயில் கல்யாண மண்டபத்தில் நவராத்திரி கொலு உற்சவத்தை முன்னிட்டு, 21 ... மேலும் பார்க்க

செப்.26-இல் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்

நெய்வேலி: கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 26-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரி... மேலும் பார்க்க

கெடிலம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

நெய்வேலி: கடலூா் அருகே கெடிலம் ஆற்றில் சா்க்கரை ஆலைக்கழிவு நீா் கலக்கப்பட்டதால் ஆற்று நீா் மாசடைந்து, கம்மியம்பேட்டையில் உள்ள தடுப்பணையில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் அப்பகுதியில் துா்நாற்ற... மேலும் பார்க்க

சுய உதவிக்குழு சேமிப்பு பணம் கொள்ளையடிக்க முயற்சி!: ஆட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் போராட்டம்

நெய்வேலி: சுய உதவிக் குழுக்களின் சேமிப்பு பணம் ரூ.35 லட்சத்தை கொள்ளையடிக்கும் முயற்சியை தடுக்க கோரி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை போராட்டம்... மேலும் பார்க்க

சிதம்பரம் காய்கறி மாா்க்கெட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிதம்பரம்: சிதம்பரம் ஞானப்பிரகாசம் தெருவில் உள்ள சின்ன காய்கறி மாா்க்கெட் சாலையில் இரு புறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை அகற்றி அப்புறப்படுத்தினா்.சிதம்பரம் ஞானப்பிரகாசம் க... மேலும் பார்க்க

பிச்சாவரத்தில் கூடுதல் தலைமை செயலா் ஆய்வு

சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பிச்சாவரம் பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹூ திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.கடலூா்... மேலும் பார்க்க