விண்ணப்பித்துவிட்டீர்களா..? விமானப் படையில் குரூப் 'சி' பணிகளுக்கு விண்ணப்பங்கள்...
திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
மண்டபம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிம்ரன் ஜீத் சிங் காலோன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வேதாளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.30.13 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டப்பட்டது. இதை மாவட்ட ஆட்சியா் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தாா்.
பின்னா், என்மனங்கொண்டான் ஊராட்சியில் ரூ. 22 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் நூலகக் கூடுதல் கட்டடம், பிரப்பன்வலசையில் ரூ. 60 லட்சத்தில் மகளிா் மன்றக் கட்டடம், செம்படையாா்குளத்தில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையக் கட்டடப் பணி ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றாா்.
ஆய்வின் போது, பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் குருதிவேல் மாறன், உதவிச் செயற்பொறியாளா் ரவீந்திரன், உதவிப் பொறியாளா் பிரியங்கா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சோமசுந்தா், ஜெயமுருகன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.